நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகளாக விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 13-வது தவணை பணத்திற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயன்பெற்று வரும் விவசாயிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கை வரும் 10ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. வங்கிக் கணக்கில் பணத்தை பெற இ-கேஒய்சி கட்டாயம். அதனால், KYC-யை புதுப்பிக்க வேண்டும்.