மனிதர்களுக்கு உணவு எவ்வளவு அவசியமோ, அதேபோல் போதுமான தூக்கமும் மிக முக்கியமானது. ஆனால், இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் தூக்கமின்மை பலரையும் பாதித்து வருகிறது. இதன் விளைவாக உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு, மருத்துவமனைகளை நாடும் நிலைக்கு பலரும் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மதிய நேரத்தில் ஒரு சிறிய தூக்கம் தூக்கமின்மைக்கு சிறந்த தீர்வாக இருக்கலாம் என்று சில மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக வெளிநாடுகளில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. ஆய்வின் போது, அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு மதிய நேரத்தில் கண்கள் கனமாகி, கவனம் சிதறுவது கண்டறியப்பட்டது.
அந்த நேரத்தில் 10 முதல் 30 நிமிடங்கள் வரை சிறிய தூக்கம் எடுத்தவர்கள், அதன் பின்னர் மனதளவில் அமைதியாகவும், பணியில் அதிக கவனத்துடனும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஒரே விதமான சூழலில் பலரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், மதிய தூக்கம் எடுத்த பெரும்பாலானவர்களுக்கும் நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் மதிய தூக்கம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்பதும் உறுதியாகியுள்ளது.
மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? மன அழுத்தத்தில் வேலை செய்பவர்களுக்கு, மதியம் ஒரு சிறு தூக்கம் இதய செயல்பாடு மெதுவாகாமல் தடுக்க உதவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேபோல், மதியம் ஒரு சிறிய தூக்கம் மூளையை ரிலாக்ஸ் செய்து சிறப்பாக செயல்பட உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
விக்டோரியா கார்ஃபீல்ட் என்ற ஆராய்ச்சியாளர் சிலரிடம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். மாணவர்கள், ஊழியர்கள், முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் என பல வகையான மக்களை மதியம் அரை மணி நேரம் தூங்க வைத்தார். எழுந்த பிறகு, மாணவர்கள் கணிதத்தில் சிறப்பாகச் செயல்படுவது கண்டறியப்பட்டது. ஊழியர்கள் புதிய வழிகளில் சிந்திப்பதைக் கவனித்தனர். வயதானவர்களுக்கு இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுவதில்லை என்பதைக் கண்டறிந்தார். இந்த விஷயங்கள் அனைத்தும் ‘ஸ்லீப் ரிசர்ச்’ இதழில் வெளியிடப்பட்டன.
எவ்வளவு நேரம் தூங்குவது நல்லது? வர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்தில் நடாலி டடோவிச்சின் குழு, மதியம் 20 நிமிட தூக்கம் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று வெளிப்படுத்தியது. ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை தூங்குவது இன்னும் சிறந்த பலனைத் தரும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், பகலில் நடுவில் எழுந்திருப்பது அவ்வளவு நல்ல விளைவை ஏற்படுத்தாது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
Read more: Breaking : ரெட் அலர்ட்.. நாளை இங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!



