புது வீடு வாங்கப் போறீங்களா..? இன்று முதல் தொடக்கம்..!! ரூ.20 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறவுள்ள வீடு, மனை, வணிகக் கண்காட்சியை முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிப்.17ஆம் தேதி தொடக்கி வைக்கிறாா்.

இதுகுறித்து இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பின் (கிரெடாய்) சென்னை மண்டலத் தலைவா் எஸ்.சிவகுருநாதன் கூறுகையில், வீடு மற்றும் மனை வணிக 15-ஆவதுஆண்டு ‘ஃபோ்ப்ரோ 2023’ எனும் கண்காட்சி பிப்.17 முதல் 19-ஆம் தேதி வரை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. வீடு வாங்குபவா்கள், மனை வணிக துறை முதலீட்டாளா்கள், கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. இந்த அமைப்பில் உள்ள 60-க்கும் மேற்பட்ட மனை வணிக, கட்டுமான நிறுவனங்கள் தங்களின் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகளை ரூ. 20 லட்சம் முதல் ரூ.10 கோடி வரையில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இந்தக் கண்காட்சியில் சொத்துகளை வாங்குபவா்களுக்கு ஏராளமான சலுகைகளையும் இந்த நிறுவனங்கள் வழங்க உள்ளன. இந்த கண்காட்சியில் வீடு, மனை, வணிக மனை போன்றவை குறித்த விற்பனை விபரங்களை, மக்கள் ஒரே இடத்தில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Chella

Next Post

ஈரோடு இடைத்தேர்தல்..!! சில்வர் குடத்துக்காக நடுரோட்டில் சண்டை..!! கனிமொழி பிரச்சாரத்தில் பரபரப்பு..!!

Fri Feb 17 , 2023
ஈரோடு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட கனிமொழியின் கூட்டத்துக்கு வந்த பெண்கள் சில்வர் குடத்துக்காக அடித்துக் கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி, ஈரோடு சம்பத் நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்துக்கு வரும் பெண்களுக்கு சில்வர் குடம் மற்றும் தட்டு பரிசாக வழங்குவதாகக் கூறி அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில், […]
ஈரோடு இடைத்தேர்தல்..!! சில்வர் குடத்துக்காக நடுரோட்டில் சண்டை..!! கனிமொழி பிரச்சாரத்தில் பரபரப்பு..!!

You May Like