திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகவில்லையா..? இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க..! சீக்கிரமே டும் டும் டும்..

temple 1

தமிழகத்தில் திருமணத்தடை, கிரகதோஷம், குழந்தைப்பேறு குறைபாடுகள் போன்ற மனஅழுத்தங்களை நீக்க வேண்டி கோவில்களை நாடும் பக்தர்கள் ஏராளம். அதில், விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை சந்திரமௌலீஸ்வரர் கோவில் இன்று திருமண தடைகளை அகற்றி, வாழ்வில் புதிய தொடக்கத்தை வழங்கும் சக்தி தலமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.


திருமண வயதை கடந்தும் பொருத்தமான துணை கிடைக்காதவர்கள் இத்தலத்தில் தாலி, புடவை, மாலை போன்றவற்றை காணிக்கையாக சமர்ப்பித்து வேண்டினால், விரைவில் நல்ல நிகழ்வு நடைபெறும் என பக்தர்கள் நம்புகின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர் கோவிலில் உள்ள மரத்தில் தொட்டில் வழிபாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

வானூர் வட்டம், திருவக்கரை பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில் பழமையும் பெருமையும் மிக்கதாக கருதப்படுகிறது. இங்குள்ள மூவரும் பாகமும் கொண்ட மும்முக லிங்கம் சிவனின் அரிய வடிவம். இறைவன் சந்திரசேகரன்; அன்னை வடிவாம்பிகை. பெருமாள் சந்நிதியும் இத்தலத்தின் தனிச்சிறப்பு.

குண்டலினி முனிவர் வம்சத்தைச் சேர்ந்த வக்கிராசுரன் இப்பகுதியை ஆண்டதாகவும், அவனை அழிக்க காளி இறைவனை வழிபட்டு இறைவன் அவனுக்கு அருள் புரிந்ததாகவும் தலபுராணம் கூறுகிறது. இதுவே இத்தலத்துக்கு “வக்கிரன் வழிபட்ட தலம்” என்ற பெருமையை வழங்குகிறது.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், கபிலதேவ நாயனார், சேக்கிழார் உள்ளிட்டோரால் போற்றப்பட்ட சிவத்தலம். நாயனார் பாடல்களால் புனிதமான இடம் என்பதால், பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகம். கோவிலின் ராஜகோபுர இடப்பக்கத்தில் வக்கிரகாளி அம்மன் அழகிய உருவில் பக்தர்களை கருணையுடன் அருள்புரிகிறார். ஒவ்வொரு பௌர்ணமி நாளும் அம்மன் சன்னதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் வழிபடுவது இயல்பான காட்சி.

Read more: பிரதமரின் மெய்க்காப்பாளர்கள் எடுத்துச் செல்லும் கருப்பு பிரீஃப்கேஸில் என்ன இருக்கும்? 99% பேருக்கு இது தெரியாது!

English Summary

Are you still not married despite passing the marriageable age? Go to this temple and buy it!

Next Post

TET தேர்வு சட்டத்தில் திருத்தம்... பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!

Wed Nov 26 , 2025
டெட் தேர்வு தொடர்பாக கல்வி உரிமைச் சட்டம், தேசிய ஆசிரியர் கல்விக்குழும சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்து ஆசிரியர்களை பாதுகாக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, அவர் எழுதிய கடிதத்தில்: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், அப்பணியில் தொடர 2 ஆண்டுகளுக்குள் டெட் தகுதியைப் பெற வேண்டும் என்றும் தகுதி பெறாவிட்டால் பதவி உயர்வுக்குத் தகுதியற்றவர்களாக இருப்பார்கள் என்றும் உச்ச […]
TET 2025

You May Like