உங்க கார், பைக் டயர்கள் சீக்கிரம் தேய்ந்து போகிறதா?. ரொம்ப நாள் நீடிக்க பெஸ்ட் டிப்ஸ் இதோ!.

car tire 1 11zon

பொதுவாக நாம் வாகனம் வாங்கும் போது, அது எத்தனை சிசி, எவ்வளவு டார்க், பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது என்று தான் பார்ப்போம். ஆனால் அது என்னதான் அது நவீன வாகனமாக இருந்தாலும், டயர் சரியாக இருந்தால் மட்டுமே அதற்கான ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தும். சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமாக, வாகன டயர்களின் ஆயுட்காலத்தை நம்மால் அதிகரிக்க முடியும்.


எந்த வாகனமாக இருந்தாலும் அவற்றின் டயர்கள் தரமானதாக இருக்க வேண்டும். நல்ல தரமான டயர்களின் செலவு அதிகம்தான் என்றாலும், அதனால் ஏற்படும் நன்மைகள் பல. தரமான டயர்கள் என்றுமே நீடித்து உழைக்கும். எனவே அதிகம் செலவானாலும் பரவாயில்லை என்று, தரமான டயர்களைத் தேர்வுசெய்வது நல்லது.

அதிக சிசி கொண்ட பைக்தானே என்று எப்போதும் வேகமாக ஓட்ட வேண்டாம். ஏனெனில் வாகனத்தை வேகமாக ஓட்டும்போது டயர்களின் வெப்பம் அதிகமாகும். இதனால் டயரின் தேய்மான அளவு அதிகரித்து அதன் ஆயுளை குறைக்க வாய்ப்புள்ளது. எனவே முறையான வேக வரம்புகளைப் பின்பற்றுவது நல்லது.

நீங்கள் இறுதியாக உங்கள் வானகத்திற்கு எப்போது காற்று நிரப்பினீர்கள். உடனே சென்று உங்கள் வாகன டயர்களின் காற்றழுத்தத்தை சோதனை செய்யுங்கள். எப்போதுமே ஒரு டயரில் எவ்வளவு காற்று இருக்க வேண்டும் என அதன் உற்பத்தி நிறுவனமே பரிந்துரை செய்திருக்கும். அந்த அளவில் காற்று நிரப்பினால் மட்டுமே டயரின் ஆயுட்காலம் நீண்ட நாளுக்கு வரும். பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் இலவசமாகவே காற்று நிரப்பித் தருவார்கள்.

கரடு முரடான சாலைகள் டயர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். எனவே வாகனம் ஓட்டும்போது எதிரே பள்ளம் வந்தாலும் வேகத்தை குறைத்து மெதுவாக பள்ளத்தில் விடுங்கள். பெரும்பாலும் பள்ளங்கள் நிறைந்த சாலைகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அதாவது கொஞ்ச தூரம் சுற்றி சென்றாலும் பரவாயில்லை, நல்ல பாதையில் செல்வது நல்லது.

வாகனத்தில் அதிகமாக எடை ஏற்றினால் அது உங்கள் டயருக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் டயர்கள் வேகமாக தேய்ந்து விடும். எனவே உற்பத்தி நிறுவனம் பரிந்துரை செய்த எடைக்கு அதிகமாக வாகனத்திற்கு சுமையைக் கொடுக்க வேண்டாம்.

Readmore: வந்தே பாரத் இரயிலில் அசைவ உணவு கிடையாதா..? ஆன்லைன் செயலியால் ஷாக் ஆன பயணிகள்..!! – ரயில்வே விளக்கம்

KOKILA

Next Post

இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று மனதார முறையிடுங்கள்.. தீராத பிரச்சனைகளும் தீரும்..!!

Sun Jun 1 , 2025
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரே ஒரு முறையாவது சென்று, உங்கள் மனக் குறைகளை அன்னையின் பாதத்தில் மனதாரச் சொல்லி வேண்டிக் கொண்டுவிட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றம் நிகழும். இது ஆயிரக்கணக்கானோர் அனுபவித்த நம்பிக்கை மட்டுமல்ல, உண்மையாக நடக்கும் நிகழ்வும் கூட. வாழ்க்கையில் நிம்மதி இல்லை. குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள். வாழ்க்கைத் துணையுடன் முரண்பாடுகள், திருமண திட்டங்கள் தாமதமாவது, குழந்தை பாக்கியம் இல்லாதது… என வாழ்வில் மன அழுத்தம் தரும் […]
meenakshi amman temple

You May Like