நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாகவே நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில், மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி பரப்புரையை துவங்க சென்ற திருச்சி வேட்பாளர் ராஜேஷ், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீமான், மொழிப்போர் ஈகியருக்கு மலர் வணக்கம் செலுத்த தடை விதித்து, கைது செய்வதா..? இதுதான் திராவிட மாடல் ஆட்சியா..? இதுபோன்ற அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என தெரிவித்துள்ளார்.