ஐதராபாத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த சூரிய பிரபா (25), தனது கணவர் விவேக் மற்றும் 4 வயது மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில், தனது மேலாளர் சிவேஷ் ஷர்மாவுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். அலுவலக வேலை என்ற போர்வையில் தனது கணவரை ஏமாற்றி வந்துள்ளார்.
விவேக் ஒருமுறை தற்செயலாக அலமாரியை சோதித்தபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சில பாலியல் உபகரணங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனைவியின் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் முதலில் அமைதி காத்த விவேக், பின்னர் தொழில்நுட்ப ரீதியாக உண்மையை அறிய தீர்மானித்தார். செயலி உருவாக்குநரான (App Developer) அவர், தனது மனைவியின் மொபைல் செயல்பாடுகளை கண்காணிக்கத் தொடங்கியபோதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வர தொடங்கின.
கடந்த 8ஆம் தேதி நள்ளிரவில், தனது கணவனும் மகனும் பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, சூரிய பிரபா வழக்கம்போல கழிவறைக்குச் சென்று மேலாளருடன் வீடியோ கால் மூலம் பாலியல் ரீதியான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தனது மொபைல் செயலி மூலம் நேரலையில் கண்ட விவேக், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றார்.
கழிவறை கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த அவர், தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சூரிய பிரபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் காவல்துறைக்கு சென்றது. விசாரணையில், சூரிய பிரபா ஒரு வருடமாக தனது திருமண உறவை மீறி வந்தது தெரியவந்தது. “எனது மகனின் எதிர்காலத்திற்காகவே இவளை உயிரோடு விட்டேன்” என்று விவேக் காவல் நிலையத்தில் கதறினார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



