படியில் பயணம்.. அகால மரணம்.! கல்லூரி மாணவனுக்கு நிகழ்ந்த கொடூரம்.. அருப்புக்கோட்டையில் சோகம்.!

எவ்வளவுதான் போலீசாரும் பெற்றோரும் எச்சரித்தாலும் கூட மாணவர்கள் படியில் தொங்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மாணவ, மாணவிகள் கூட்ட நெரிசலில் சிக்கி படிகள் நின்றவாறு பயணம் செய்கின்றனர்.


இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான பேருந்துகள் பள்ளி கல்லூரி செல்லும் நேரத்தில் இயக்கப்படுவதில்லை என்று கூறலாம். ஆனால் அதே நேரத்தில் என்னதான் பேருந்தில் நெரிசல்கள் இல்லை என்றாலும் கூட சில சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் படியில் தொங்கியவாறு பயணம் செய்வதை சாகசமாகவும், கெத்தாகவும் நினைக்கின்றனர்.

இது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்ற எண்ணத்தை அவர்கள் ஏற்க மறுத்து விடுகின்றனர். அந்த வகையில் அருப்புக்கோட்டையில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் மாதேஸ்வரன் என்ற கல்லூரி மாணவர் அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.

அவர் படியில் தொங்கியவாறு பயணித்ததால் தவறி விழுந்து பேருந்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெற்றோரிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்..!! தாயின் கள்ளக்காதலனால் நேர்ந்த சோகம்..!! திடுக்கிடும் தகவல்..!!

Mon Nov 14 , 2022
பூந்தமல்லி அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம், மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி (40). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் அம்சவல்லி வேலை செய்து வருகிறார். இவருக்கு சங்கீதா (18) என்ற மகள் இருந்தார். கடந்த […]
001 21

You May Like