ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி!… 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கம் வென்றார் ஜோதி யர்ராஜி!.. ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம்!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் ஜோதி யர்ராஜி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.


24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. நடைபெற்று வருகிறது. இதில், பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் ஜோதி யர்ராஜி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 23 வயதான யர்ராஜி 13.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். அவருக்கு அடுத்தபடியாக ஜப்பானிய ஓட்டப்பந்தய வீரர்களான டெராடா அசுகா (13.13 வினாடிகள்) மற்றும் அயோகி மசுமி (13.26 வினாடிகள்) இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர். நான்காம் இடத்தை இந்திய வீராங்கனையான ராம்ராஜ் நித்யா பந்தய தூரத்தை 13.55 வினாடிகள் கடந்தார். இந்த போட்டி தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அஜய்குமார் சரோஜ் 3 நிமிடம் 41.51 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த 26 வயதான அஜய்குமார் இந்த போட்டி தொடரில் தொடர்ச்சியாக கைப்பற்றிய 3-வது பதக்கம் இதுவாகும். 2017-ம் ஆண்டு தங்கப்பதக்கமும், 2019-ம் ஆண்டு வெள்ளிப்பதக்கமும் வென்று இருந்தார். இதில் ஜப்பானின் யுசுகி தகஹாஷி (3 நிமிடம் 42.04 வினாடி) வெள்ளிப்பதக்கமும், சீனாவின் லூ டெஸ்ஹூ (3 நிமிடம் 42.30 வினாடி) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.

இதேபோல் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) பந்தயத்தில் காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் அப்துல்லா அபூபக்கர் தனது 4-வது முயற்சியில் 16.92 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். கேரளாவை சேர்ந்த 27 வயதான அபூபக்கருக்கு ஆசிய போட்டியில் கிடைத்த முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். ஜப்பானின் இகிஹதா ஹிகாரு (16.73 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், தென்கொரியாவின் ஜாங்வோ கிம் (16.59 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஜஸ்வர்யா மிஸ்ரா 53.07 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கத்தை வென்றார். ஆண்களுக்கான டெக்கத்லான் பந்தயத்தில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கருக்கு (7,527 புள்ளி) வெண்கலம் கிட்டியது. 16-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 2-வது நாள் பந்தயங்கள் முடிவில் இந்தியா 3 தங்கம், 3 வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. ஜப்பான் 7 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும் இருக்கின்றன.

KOKILA

Next Post

புதிய வழிகாட்டுதல்.. இனி கட்டாயம் பின்பற்ற வேண்டும்..! மாநில திட்ட இயக்குநர் அதிரடி உத்தரவு...!

Fri Jul 14 , 2023
பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு, உறுப்பினர் மாற்றங்கள் குறித்து கூடுதல் வழிகாட்டுதல்களை மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் . அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுவின் மறுகட்டமைப்பு நடைமுறைகளானது கடந்த 2022 – ஆம் ஆண்டு ஏப்ரல் , ஜுலை மாதங்களில் நடைப்பெற்றது. மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்து தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சி முதற்கட்டமாக அளிக்கப்பட்டது. அதன் படி, பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும் , […]
124331 tn govtlogo

You May Like