பட்டப்பகலில் பெண்ணை கடத்த முயற்சி..!! தலைதெறிக்க ஓடிய கடத்தல்காரர்கள்..!! நடந்தது என்ன..? அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!

ஹரியானாவில் பட்டப்பகலில் பெண்ணை கடத்த முயன்ற சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


ஹரியானா மாநிலம் யமுனா நகரில் கடந்த சனிக்கிழமை அன்று ஜிம்மில் இருந்து காருக்கு திரும்பிய பெண்ணை 4 பேர் கடத்த முயன்றுள்ளனர். ஆனால், சிறிது நேரத்தில் கடத்தல்காரர்கள் 4 பேரும் தெறித்து ஓடுகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கடத்தல் சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் யமுனா நகர் டிஎஸ்பி கமல்தீ சிங் கூறியுள்ளார்.

அந்த சிசிடிவி காட்சியில், பெண்ணை கடத்துவதற்கான சிறந்த சந்தர்ப்பத்தை கடத்தல்காரர்கள் தேடுகின்றனர். ஆனால், குற்றம் நடந்த இடத்தை விட்டு அவர்கள் தலைதெறிக்க ஓடியதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. பட்டப்பகலில் இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளதால், பெண்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

CHELLA

Next Post

புத்தாண்டை வரவேற்று நண்பர்களுடன் பார்ட்டி..!! முதல் முறையாக மது குடித்த இளைஞர் மூச்சுத்திணறி பலி..!!

Mon Jan 2 , 2023
புத்தாண்டை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த சேலத்தை சேர்ந்த நபர் மது அருந்தி கொண்டிருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்ட்டம் மல்லூர் அருகே வேங்காம்பட்டியை சேர்ந்த அண்ணாமலை என்பவரது மகன் சந்தோஷ் (வயது 23). இவர், இந்த ஆண்டு புத்தாண்டை சிறப்பாக கொண்டாட திட்டுமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக தனது நண்பர்கள் 9 பேருடன் அவர் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடுவதற்காக ஏற்காட்டிற்கு வந்துள்ளார். […]
drinking alone wide e785ae1178e413b155e9e1214fac2018a77e057a

You May Like