கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நெய்வனை கிராமத்தைச் சேர்ந்தவர் அருண். இவர், உளுந்தூர்பேட்டையில் தங்கி வியாபாரம் செய்து வருகிறர். இந்நிலையில், நேற்று காலை உளுந்தூர்பேட்டை திருவெண்ணைநல்லூர் சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் டைரி மில்க் சாக்லேட்டை வாங்கி பிரித்துள்ளார். அப்பொழுது, அதில் அதிக அளவில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னா் சாக்லேட்டின் காலாவதி ஆகும் தேதியைப் பார்த்த பொழுது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இதற்கு என காலக்கெடு இருப்பதை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில், அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த அருண் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.