புலம்பெயர் தொழிலாளர்கள் கவனத்திற்கு..!! இன்னும் 3 மாதங்களுக்குள் கிடைத்துவிடும்..!! உச்சநீதிமன்றம் அதிரடி..!!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக சமூக ஆர்வலர்கள் ஹர்ஷ் மந்தர், அஞ்சலி பரத்வாஜ், ஜெகதீப் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூனில் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது.

“புலம்பெயர் தொழிலாளர்களின் முழுவிவரங்களை தொகுக்கும் வகையில் புதிய இணையதளம் தொடங்கப்பட வேண்டும் வேண்டும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் அனைவருக்கும் உணவு தானியங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தந்த மாநில அரசுகள் அவர்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. அதன்படி, மத்திய தொழிலாளர் நலத்துறை சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு இ-ஷ்ரம் என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. கடந்த மார்ச் மாத புள்ளிவிவரத்தின்படி இ-ஷ்ரம் இணையத்தில் 28.51 கோடி புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் விபத்துக் காப்பீடு உட்பட பல்வேறு திட்டங்களின் பலன்களை புலம்பெயர் தொழிலாளர்கள் பெற்று வருகின்றனர்.

இந்த சூழலில் சமூக ஆர்வலர்கள் ஹர்ஷ் மந்தர், அஞ்சலி பரத்வாஜ், ஜெகதீப் ஆகியோர் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுக்களை தாக்கல் செய்தனர். புலம்பெயர் தொழிலாளர்களில் சுமார் 10 கோடி பேர் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் பலன்களை அடையவில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மாநில அரசுகள் முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அஹ்சானுதீன் அமானுல்லா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறுகையில், “புலம்பெயர் தொழிலாளர்களில் சுமார் 10 கோடி பேர் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட பலன்களை பெறவில்லை. அவர்களுக்கும் முழுப் பலன்கள் கிடைக்க வேண்டும்” என்று கோரினார்.

மத்திய, மாநில அரசுகள் அளித்த விளக்கத்தில், ”அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் உணவுப் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட அனைத்து திட்ட பலன்களும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எம்.ஆர்.ஷா,அஷானுதீன் அமனுல்லா அமர்வு கூறுகையில், ”இ-ஷ்ரம் இணையத்தில் பதிவு செய்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். விடுபட்டவர்களுக்கு அடுத்த 3 மாதங்களில் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் ரேஷன் அட்டைகளை வழங்க வேண்டும். இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உத்தரவிட வேண்டும். ரேஷன் அட்டை மூலம் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அனைத்து சலுகைகளும் புலம்பெயர் தொழிலாளர்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட பலன்களும் அவர்களை சென்றடைய வேண்டும்” என்று தெரிவித்தது.

CHELLA

Next Post

உங்கள் வீட்டை குளிர்ச்சியாக மாற்ற வேண்டுமா..? இனி ஏசி, ஏர் கூலர் தேவையில்லை..!! இந்த ஒரு பொருள் போதும்..!!

Fri Apr 21 , 2023
தினமும் கொளுத்தும் வெயில் தாங்க முடியாத எரிச்சலையும், வெக்கையையும் உண்டாக்குகிறது. குறிப்பாக, மாலையில் இருக்கும் வெப்பத்தின் தாக்கம் வியர்வையிலேயே நம்மை குளிப்பாட்டி விடுகிறது. இப்படியான சூழலில் நிம்மதியான உறக்கத்திற்கு எங்கே போவது..? அதுவும் நாள் முழுவதும் களைத்து சோர்வாக இருப்போருக்கு இது மிகவும் கடினம் தான். இதற்காகத்தான் பலரும் வீட்டில் ஏசியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பலருக்கும் இது சாத்தியமில்லாத பொருளாதார சிக்கல் இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மையாக உள்ள […]
Room

You May Like