வாகன ஓட்டிகளே கவனம்..!! இனி இந்த தவறை செய்தாலும் அபராதம்..!! போக்குவரத்து காவல்துறை அதிரடி..!!

சாலை விதிகளை மீறுபவர்கள் மீது தமிழ்நாடு போக்குவரத்து போலீசார், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஏற்கனவே சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டுகளை அகற்றி இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். சென்னை முழுவதும் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் விதிகள் மீறி வைக்கப்பட்டிருந்தால் அபராத சலான் ஒட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், தற்போது ஸ்டாப்லைன் கோட்டைத்தாண்டினால் ரூ.500 அபராதம் விதிக்கும் நடவடிக்கையை சென்னை போலீசார் தொடங்கியுள்ளனர். இதற்காக சென்னை முழுவதும் 287 இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்களையும் போலீசார் நடத்தினர். இதனால் வாகன ஓட்டிகள் இனி விதிகளை மீறுவது என்பது சாத்தியமே இல்லை. எல்லாவற்றிற்கும் செக் வைக்கும் வகையில் போக்குவரத்து போலீசார், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

CHELLA

Next Post

செம குட் நியூஸ்..!! அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்..!! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!!

Tue Feb 28 , 2023
தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதற்கான விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்துத் துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் […]
Secretariat

You May Like