பெற்றோர்களே கவனம்.. விஸ்வரூபம் எடுக்கும் அடினோவைரஸ்.. 9 நாட்களில் 40 குழந்தைகள் உயிரிழப்பு…

மேற்குவங்கத்தில் அடினோவைரஸ் காரணமாக, மேலும் 4 குழந்தைகள் இறந்ததால், 9 நாட்களில் 40 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

சமீபகாலமாக நாட்டின் சில பகுதிகளில், அடினோவைரஸ் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ்கள் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அடினோவைரஸ் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அடினோவைரஸ் வேகமாக பரவக்கூடிய தொற்று நோயாகும்..

Adenovirus blog 1080x675 1

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மேலும் நான்கு குழந்தைகள் இந்த அடினோவைரஸால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் 9 நாட்களில் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. நேற்று காலை அதிஃபா காதுன் என்ற ஒன்றரை வயத் குழந்தை, அர்மன் காசி என்ற 4 வயது சிறுவன் பி.சி. ராய் குழந்தைகள் மருத்துவமனையில் உயிரிழந்தனர். எனினும், நேற்று மாலை 4 மணியளவில், அதே மருத்துவமனையில் மேலும் 4 குழந்தை இறப்புகள் பதிவாகியுள்ளன, இதனால் இறப்பு எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

அடினோவைரஸ் அறிகுறிகளுடன் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று உயிரிழந்த இந்த நான்கு குழந்தைகளின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. கடந்த 13 மணி நேரத்தில் இறந்ததாகக் கூறப்படும் அனைத்து குழந்தைகளும் காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் போன்ற பொதுவான அடினோவைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சையில் இருந்தனர்.. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

இதனை தொடர்ந்து மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை மருத்துவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கி உள்ளது.. காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் குழந்தைகளை, குறிப்பாக இரண்டு வயது அல்லது அதற்கு குறைவான குழந்தைகள் அடினோவைரஸால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதால், குறிப்பாக குழந்தை மருத்துவர்களுக்கு அடினோவைரஸ் குறித்த ஆலோசனையை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அடினோவைரஸ் அறிகுறிகள் : சளி, காய்ச்சல், சுவாசப் பிரச்சனைகள், தொண்டை புண், நிமோனியா மற்றும் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி, காய்ச்சல் போன்றவை அடினோவைரஸின் பொதுவான அறிகுறிகளாகும்.. இந்த வைரஸ் தோல் தொடர்பு மூலமாகவும், இருமல் மற்றும் தும்மல் மூலமாகவும், பாதிக்கப்பட்ட நபரின் மலம் மூலமாகவும் காற்றில் பரவும். இதுவரை, வைரஸுக்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் அல்லது குறிப்பிட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை.

அடினோவைரஸ் வயிற்று பிரச்சனைகள், சளி, நிமோனியா என பல்வேறு நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தலாம். இந்த வைரஸ் வயது வித்தியாசமின்றி யாரையும் பாதிக்கலாம்.. ஆனால் இது பொதுவாக குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளில் அதிகம் காணப்படுகிறது. எனினும் அனைவருமே அடினோவைரஸில் இருந்து தற்காத்து கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சோப்பு அல்லது சானிடைசர் மூலம் கைகளை கழுவுதல் மற்றும் நெரிசலான இடங்களில் முகமூடியை அணிதல், இருமல் இருப்பவர்களிடமிருந்து சமூக இடைவெளியை பராமரித்தல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்..

’மக்களே உஷார்’..!! ’மழைக்காலங்களில் வேகமாக பரவும் நோய்கள்’..!! ’தப்பிக்க இதுதான் ஒரே வழி’..!!

நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளவர்கள் அல்லது மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் அல்லது கீமோதெரபியில் இருப்பவர்கள் ஆகியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக இருக்கும்.. அத்தகைய நபர்கள் அடினோவைரஸால் பாதிக்கப்பட்டால் நிமோனியாவை உருவாக்கும் வாய்ப்பு அதிகம். எனவே அவர்களை கூடுதல் கவனத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும்..

1newsnationuser1

Next Post

என்னை சந்திக்க வரும் பொழுது இனி இதை தவிர்க்க வேண்டும்...! அமைச்சர் உதயநிதியின் அதிரடி அறிவிப்பு...!

Mon Mar 6 , 2023
தன்னை சந்திக்க வரும் தொண்டர்கள் ஆடம்பரத்தை தவிர்த்து, புத்தகங்களை பரிசளியுங்கள் என திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இளைஞர் அணி செயலாளராக கழக நிகழ்ச்சிகளிலும், அமைச்சராக அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யும் போது, நீங்கள் அளிக்கும் வரவேற்பைக் கண்டு நெகிழ்கிறேன். என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், காட்டும் அன்பும் என்னை இன்னும் உத்வேகத்துடன் செயல்பட வைக்கிறது. […]
Udhayanidhi

You May Like