மக்களே கவனம்!!! இன்று முதல் ஆரம்பம்… மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்!!!

ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு கடந்த 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.


இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் மின்சாரத்தில், எந்த மாற்றமும் இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இன்று(நவம்பர் 28) முதல் டிசம்பர் 31ம் தேதி வரை மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். இந்த சிறப்பு முகாம்கள் பண்டிகை தினங்களைத் தவிர, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும்.

Newsnation_Admin

Next Post

மாற்றம்...! டிரைவிங் லைசென்ஸ் பெற இனி இந்த ஆவணம் கட்டாயம்...! மசோதா தாக்கல் செய்யும் மத்திய அரசு...!

Mon Nov 28 , 2022
அரசு வேலை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை பெற பிறப்பு சான்றிதழை கட்டாயமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை, வாக்காளர் பட்டியலில் இடம் பெறுதல், மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் நியமனம், ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் வழங்குதல் என அனைத்துத் துறைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ்களை கட்டாய ஆவணமாக்க மத்திய அரசு முன்மொழிகிறது. முன்மொழியப்பட்டும் சட்டத்தின் படி, மருத்துவமனைகளில் அனைத்து இறப்புச் […]
Driving Licence Haryana

You May Like