செங்கல்பட்டு மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு…! இன்று காலை 9 முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம்…!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்பம் நிறுவனத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டுதல் மையம் இணைந்து நடத்த உள்ளது. இந்த முகாமில் 2,000-ற்கும் மேற்பட்ட துறையின் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவைக்கேற்ற நபர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு பட்டப்படிப்பு, BE, ஐடிஐ, செவிலியர்கள் மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் தங்களுடைய கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவுடைய புகைப்படத்துடன் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கலந்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

இரும்பு நுரையீரலுடன் 7 தசாப்தங்களுக்கு மேல் வாழ்ந்த நோயாளி!… கின்னஸ் உலக சாதனை!

Sat Sep 2 , 2023
அமெரிக்காவை சேர்ந்த போலியோ நோயால் பாதிக்கப்பட்ட நபர், சிலிண்டர் போன்ற இரும்பு நுரையீரலுடன் 7 தசாப்தங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார். அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் பால் அலெக்சாண்டர் தனது 6 வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் அவரின் கழுத்துக்கு கீழ்பகுதி முழுமையாக செயலிழந்தது. இவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், இவருக்கு மூச்சுவிடுவதற்கு கடினமாக […]

You May Like