சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துவோருக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.. இன்ஸ்டாகிராம், யூ டியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் அதிக ஃபாலோயர்களை கொண்ட சமூக ஊடக பிரபலங்கள், பிரபலமான பல நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்ற அவற்றின் தயாரிப்புகளுக்கு ஆதரவாக விளம்பரம் செய்வதாக கூறப்படுகிறது.. தெரிவிக்கின்றன. இந்நிலையில் சமூக ஊடக பிரபலங்களுக்கான சில வழிகாட்டுதல்களை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் நேற்று வெளியிட்டது.. […]

விப்ரோ நிறுவனம் 800 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் கடந்த ஆண்டின் இறுதி முதலே ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. […]

கடந்த ஆண்டு இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை விட அதிகமாக இருந்தது என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.. சமீப காலமாக, இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளது. பில்களை செலுத்துவது முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை பல்வேறு பணப் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ செயலிகள் பயன்படுத்தப்படுகிறது.. பணத்தை வேறொரு நபருக்கு அனுப்பவோ அல்லது பெறவோ நாம் இந்த […]

சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக 380 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக ஸ்விகி நிறுவனம் அறிவித்துள்ளது.. கடந்த சில மாதங்களாக பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி, 380 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணி நீக்கம் குறித்து அந்நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. எனினும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக […]

பஞ்சாப் மாநிலத்தில் 88 வயதான மஹந்த் துவாரகா தாஸ் என்ற முதியவருக்கு ரூ.5 கோடி லாட்டரி பரிசு கிடைத்துள்ளது.. மஹந்த் துவாரகா தாஸ் தனது 13-வது வயதில், 1947-ம் ஆண்டு தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்தார். தற்போது சண்டிகரில் உள்ள டெரபஸ்ஸி என்ற பகுதியில் வசித்து வருகிறார்.. சாதாரண குடும்ப பின்னணியை கொண்ட அவர் அடிக்கடி லாட்டரி சீட்டுகளை வாங்கும் பழக்கம் கொண்டவர்.. அந்த வகையில் அவர் சமீபத்தில் […]

பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது.. தமிழக பாஜக தலைவர் அண்னாமலை, மூத்த தலைவர்கள் ஹெச், ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.. வேறு யாருக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. குறிப்பாக சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக அராஜகம் நடந்ததாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும் ஆளுநரை ஒருமையில் பேசியதற்காக […]

பொதுவாக ஹோட்டல் உணவு என்றாலே அனைவருக்கும் அலாதி பிரியம்.. ஆனால் அதை எப்படி தயாரிக்கின்றனர் என்று பார்த்தால், ஹோட்டல் உணவை விரும்பி சாப்பிடுவார்களா என்பது சந்தேகம் தான்.. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒருவர் எச்சில் தடவி சப்பாத்தி தயாரிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. காஜியாபாத்தில் உள்ள சாஹிபாபாத் பகுதியில் உள்ள ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.. இந்த சம்பவத்திற்கு சமூக […]

தெற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 4103 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவில் முடிவடைய உள்ளது. ஏசி மெக்கானிக், கார்பெண்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர், பெயிண்டர் போன்ற தொழில்களில் பயிற்சி பெறுவதற்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தென்கிழக்கு ரயில்வேயின் scr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம். தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள […]

நடிகர் விஜய், அஜித் இருவரும் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக உள்ளனர்.. இந்த 2 உச்ச நடிகர்களும் தங்களுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர்.. எனவே சமூக வலைதளங்களில் அவ்வப்போது விஜய் – அஜித் ரசிகர்களிடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.. இதனிடையே பொங்கல் பண்டிகையை ஒட்டி விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் வெளியாகின.. இந்த படங்கள் வெளியாவதற்கு முன்பே வாரிசு படத்தின் தயாரிப்பாளர் விஜய் தான் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.42,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் […]