மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.. ஐமேக்ஸ் வடிவத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் பொன்னியின் செல்வன் தான். சமீபத்தில், பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக […]
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தமிழகம் அமைதிப்பூங்காவா என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கோவை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர், சேலம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி பிரமுகா் வீடுகள், கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால், தமிழ்நாடு முழுவதும் […]
நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆன்லைன் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் காவல்துறையின் ஆட்சேபனையில்லா சான்றிதழ்களுக்கு (பிசிசி) விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.. பாஸ்போர்ட் தொடர்பாக காவல்துறையின் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெறும் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளது.. மத்திய வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ செப்டம்பர் 28 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆன்லைன் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் காவல்துறையின் ஆட்சேபனையில்லா […]
11 லட்சத்திற்கும் அதிகமான ரயில்வே ஊழியர்களுக்கான 78 நாள் போனஸ் வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.. இந்திய ரயில்வேயில் பணிபுரியும் 11 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள், தசராவுக்கு முன் 78 நாள் சம்பளத்தை போனஸாக பெற உள்ளனர்.. கடந்த 11 ஆண்டுகளாக, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் வேலை செய்ததற்கு சமமான உற்பத்தித்திறன்-இணைக்கப்பட்ட போனஸ் (PLB- productivity-linked bonus) இந்திய ரயில்வே வழங்கியுள்ளது. அதாவது தகுதியுள்ள ரயில்வே […]
இந்த டிஜிட்டல் அத்தியாவசிய பணிகளுக்காக ஆன்லைன் பணப்பரிமாற்றத்தை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.. இதன் மக்கள் எளிதாக பணம் செலுத்த முடியும் என்றாலும் பல்வேறு சைபர் மோசடிகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றனர்.. அந்த வகையில் சைபர் கிரைமினல்கள் சிம் டூப்ளிகேஷன்/குளோனிங் நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களின் பணத்தை ஏமாற்றி வருகின்றனர். இந்த நுட்பத்தின் மூலம், ஒரு முறை கடவுச்சொற்களை (OTP) அணுகுவது உட்பட, உங்கள் சிம்-இணைக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்தையும் மோசடி செய்பவர்கள் கட்டுப்படுத்த […]
பிரபல மலையாள இயக்குனர் அசோகன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. கேரள மாநிலம் வர்கலாவை பூர்வீகமாகக் கொண்ட அசோகன் மலையாளத்தில் நகைச்சுவை படங்களை இயக்கியதன் மிகவும் பிரபலமானவர். 80களில் மலையாள இயக்குனர் சசிகுமாரிடம் உதவியாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.. பின்னர் சுரேஷ் கோபி, ஜெயராம் மற்றும் ரஞ்சினி நடித்த வர்ணம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது இரண்டாவது படமான ஆச்சார்யன் அவரது திருப்புமுனையாக கருதப்பட்டது. பின்னர் அவர் […]
அதிக கொழுப்பு இதய நோய், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் நீரிழிவு போன்ற பல உடல்நல சிக்கல்களுக்கான எச்சரிக்கை அறிகுறியாகும். அதிக கொலஸ்ட்ரால் பல உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, இது கண்டறியப்பட்டவுடன், அதைக் கட்டுப்படுத்த, உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த, உணவில் பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதிக கொலஸ்ட்ராலை எதிர்த்துப் போராடும் ஒருவர், தாங்கள் உண்ணும் […]
ரஷ்யாவில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துடன், 20 பேர் காயமடைந்ததாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உட்முர்டியா (Udmurtia) என்ற மாகாணத்தில் தலைநகரான Izhevsk என்ற இடத்தில் இன்று துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது.. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த காவலாளி ஒருவரையும், சில குழந்தைகளையும் கொன்றதாக […]
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 28-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, […]
நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் “ சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு – இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த இலட்சிய நோக்கத்துடன்தான் தொடர்ந்து வழிநடத்தி இந்த இயக்கத்தை மக்களுக்கான இயக்கமாக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளை மீட்டுத் தருகிற இயக்கமாக செயல்பட்டு வருகிறது.. அண்ணா, […]