தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்.. 2020-ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கில் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று இரவு முழுவதும் போலீசார் கொடூரமாக தாக்கியதில் ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.. இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் – இன்ஸ்பெக்டர்கள் ரகு, கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது […]

தற்போதைய சூழ்நிலையில் கடன்கள் எளிதாகக் கிடைக்கின்றன. வங்கிகளைத் தவிர, நிதி சாரா நிதி நிறுவனங்கள் (NFBCs) மற்றும் பிற நிதி நிறுவனங்கள் நிமிடங்களிலேயே கடன்களை அனுமதிக்கின்றன. தொலைபேசியில் அழைப்பதன் மூலம் அதிக கடன்களைப் பெற அவர்கள் வாய்ப்பளிக்கின்றனர். வாடிக்கையாளர்களைக் கவர, குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்கக் கட்டணங்களில் தள்ளுபடி போன்ற பல்வேறு சலுகைகளை அவர்கள் அறிமுகப்படுத்துகின்றனர். பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக, கடன் வாங்கியதாலும், மாதாந்திரத் தவணைகளை (EMI) செலுத்த […]

கோள்களிலேயே செவ்வாய் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது மார்ச் 26 அன்று கும்ப ராசியில் உதயமாகவுள்ளது. இது 5 ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களைப் பெற்றுத்தரும். இவர்கள் தங்கள் பணி மற்றும் தொழிலில் பெரும் லாபங்களை ஈட்ட வாய்ப்புள்ளது. மேஷம் கும்ப ராசியில் செவ்வாய் உதயமாகும் நிகழ்வு, மேஷ ராசிக்கு 11-ஆம் வீட்டில் நிகழவுள்ளது. 11-ஆம் வீடு என்பது லாபத்தைக் குறிக்கும் இடமாகும். எனவே, மார்ச் 26 முதல் மேஷ ராசிக்காரர்கள் […]

பாதுகாப்பான முதலீடுகளைத் தேடுபவர்களுக்கு, தபால் நிலையத்தின் தொடர் வைப்புத் திட்டம் (RD) இன்றும் மிகவும் நம்பகமான, அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற சேமிப்புத் தேர்வாகத் திகழ்கிறது. சிறிய தொகைகளுடன் தொடங்கி, நீண்ட கால அடிப்படையில் ஒரு பெரிய நிதியை உருவாக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு, 10 ஆண்டுகாலத் தவணைக்காலம் மிக உயர்ந்த வருமானத்தை வழங்குகிறது. மாதம் தோறும் வெறும் ரூ. 15,000 மட்டும் […]

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக,, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினார்.. தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் வருகை தந்து […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நாடாளுமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ​​திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மக்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் மோதலின் முக்கிய அம்சங்களையும், இப்பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாட்டையும் விளக்கினார். அப்போது பேசிய அவர் “ மேற்கு ஆசிய நெருக்கடி தொடங்கி தற்போது மூன்று வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது.. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் உலகம் முழுவதும் பேச்சுவார்த்தை நடத்தி […]

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியக் கொடியுடன் இயங்கும் இரண்டு எல்பிஜி கப்பல்களான ஜக் வசந்த் மற்றும் பைன் கேஸ், மிகவும் பதற்றமான ஹார்முஸ் நீரிணையை கடக்கத் தயாராகி வருகின்றன. இந்த இரு கப்பல்களும் பாரசீக வளைகுடாவிலிருந்து இந்தியாவை நோக்கிப் பயணித்து ஜலசந்தியைக் கடந்த பிறகு, இக்கப்பல்கள் தங்களின் எல்பிஜி சரக்குகளுடன் இந்தியத் துறைமுகங்களுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கியதிலிருந்து, இப்பகுதியில் […]

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி, புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக முதலில் அறிவித்திருந்தது. வேட்பு மனு தாக்குதலுக்கு இன்றே கடைசி நாள் என்பதால் நேற்றிரவு 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விஜய் வெளியிட்டார்.. இந்த நிலையில் திடீர் திருப்பமாக தவெக உடன் நேயம் மக்கள் கழகம் என்ற கட்சி கூட்டணி அமைத்துள்ளது.. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் “ புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் […]

இந்த முறை, ஏர் கண்டிஷனர் (AC) உற்பத்தியாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். நாட்டின் பல பகுதிகளில் மேற்கு திசை காற்றழுத்தத் தாழ்வுநிலைகளால் ஏற்படும் பருவம் தவறிய மழையே இதற்குக் காரணம். இது கோடையின் ஆரம்பத்தில் விற்பனையைப் பாதிக்கக்கூடும். வழக்கமாக, மார்ச் மாதத்தில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும். இதனால், குளிர்விக்கும் பொருட்களுக்கான தேவை பன்மடங்கு அதிகரிக்கும். ஆனால் இந்த முறை வானிலை நிறுவனங்களின் கவலைகளை அதிகரித்துள்ளது. இருப்பினும், ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை […]