புனேவாசி 21 வயது ரஹில், தனது கவாசாகி நிஞ்ஜா பைக்கில் “Will Run” என்ற நம்பர் பிளேட்டை வைத்து சமூக ஊடகங்களில் சவால் விடுத்துள்ளார். இதில் பிரச்சனை தொடங்கியது, ரஹிலின் நண்பர் நிதீஷ் K பைக்கின் புகைப்படத்தை X (முந்தைய Twitter) இல் பகிர்ந்து, புனே போலீசை டேக் செய்து: “முடிந்தால் என்னை பிடியுங்கள்..” என்று சவால் விடுத்திருந்தார்… இந்த பதிவு வைரலான நிலையில் பலரும் இதுகுறித்து கருத்து பதிவிட்டனர்.. […]

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பெரும் கவனம் பெற்றுள்ளது.. அந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தில், ரூ. 21,000 முதலீடு செய்தால் ரூ. 2 லட்சம் வருமானம் பெறலாம் எனக் கூறும் ஒரு முதலீட்டு தளத்தை பிரசாரப்படுத்தும் போல் தோன்றுகிறது. இந்தக் கிளிப் பெரும்பாலும் பேஸ்புக விளம்பரமாகப் பகிரப்படுகிறது மற்றும் “இடையிலான தினசரி வருமானம்” கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கிறது. மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு […]

நிதிஷ் குமார், பீகார் மாநிலத்தின் நீண்டகால முதல்வர், ஜனதா தால் (யூனிடெட்) கட்சியை வழிநடத்தும் அவர் பல முறை முதல்வர் பதவியில் இருந்துள்ளார். நிர்வாகத் திறனில் கவனம் செலுத்தும் நிதிஷ் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 1 மார்ச் 1951 அன்று பீகாரின் கிராமப்புறத்தில் பிறந்த நிதிஷ் குமார், பீகார் அரசியலில் மிகவும் பாதிப்புள்ள தலைவராக உருவெடுத்தார். பல முறை முதல்வராக பணியாற்றிய இவர், வளர்ச்சியைக் கவனிக்கும் நிர்வாக […]

சமீபத்தில் 2 கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஆரம்பத்தில் என்.டி.ஏ கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நெருக்கமான போட்டியாக இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி முன்னிலை பெற தொடங்கியது.. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.. பீகார் தேர்தலில் முக்கியப் போட்டி […]

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கான ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 66.91 சதவீதமாக இருந்தது, இது இதுவரை இல்லாத அளவுக்கு பதிவான அதிக சதவீதமாகும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. நவம்பர் 6 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது, 65.08 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. நவம்பர் 11 ஆம் தேதி நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் முடிவடைந்துள்ளது, வாக்குப்பதிவு 68.67 சதவீதமாக […]

பஞ்சாப் போலீசார் பாகிஸ்தான் உளவுத்துறை Inter-Services Intelligence (ISI) ஆதரவில் செயல்பட்டதாக கூறப்படும் கையெறி குண்டு தாக்குதல் சதி குழுவை கண்டுபிடித்துள்ளனர். இந்த சதி தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தானில் உள்ள ஹாண்ட்லர்களுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்ததாகவும், பஞ்சாபில் மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடத்தில் கைக்குண்டு வீசி பதட்டத்தை ஏற்படுத்துமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பஞ்சாப் காவல் துறை இயக்குநர் (DGP) கௌரவ் யாதவ் […]

புதிய அறிவியல் ஆய்வு ஒன்று, நாஜி அதிபர் அடால்ஃப் ஹிட்லரின் உடல் மற்றும் மரபணு (ஜெனெடிக்) நிலைகளைக் குறித்து பல தசாப்தங்களாக பேசப்பட்டு வந்த வதந்திகளை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. இந்த ஆய்வில், ஹிட்லர் Kallmann Syndrome எனப்படும் ஒரு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது, மிகக் குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மற்றும் சிறிய ஆண்குறியை ஏற்படுத்தக்கூடிய கோளாறு. இந்த கண்டுபிடிப்புகள் “Hitler’s DNA: Blueprint of […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விலை குறைவான ஸ்கூட்டர்கள் குறித்து பார்க்கலாம்.. கிரீன் கம்பெனியால் தயாரிக்கப்பட்ட உடான் ஸ்பீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் . இது பல வகைகளிலும் வண்ணங்களிலும் வருகிறது. இது சிவப்பு நிறத்தில் உள்ளது. இது மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. மற்ற வண்ணங்கள் இதை விட ரூ. 5 ஆயிரம் விலை அதிகம். இந்த ஸ்கூட்டருக்கு இது போன்ற கூடுதல் தள்ளுபடி […]

இன்று டொரோண்டோவில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு (AI188) இன்று வெடிகுண்டு மிரட்டல் எச்சரிக்கை வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், விமானம் பாதுகாப்பாக டெல்லியில் தரையிறங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை நேரத்தில் அந்த விமானத்தில் குண்டு இருப்பதாக டெல்லி காவல்துறைக்கு ஒரு செய்தி வந்தது. இதையடுத்து, டெல்லி விமான நிலையத்தின் குண்டு மிரட்டல் மதிப்பீட்டு குழு (Bomb Threat Assessment Committee – BTAC) […]