தனது ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று விளக்கமளித்தார்.. அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ ஒரு வார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்லும் நான் செப்டம்பர் 8-ம் தேதி நாடு திரும்புகிறேன்.. தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் […]
கடந்த 2 நாட்களில் ரூ.1,720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.77,000-ஐ நெருங்கியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் […]
கருட புராணம் இந்து மதத்தின் 18 மிக முக்கியமான மகாபுராணங்களில் ஒன்றாகும். இந்த புராணம் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பயணத்தையும், மறுமை வாழ்க்கையையும் விரிவாக விவரிக்கிறது. கருட புராணத்தில் பாவங்கள், புண்ணியங்கள், சொர்க்கம், நரகம் மற்றும் இரட்சிப்பு பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன. குறிப்பாக, கருட புராணம், ஒருவர் தனது வாழ்க்கையில் செய்யும் பாவங்களுக்கு மரணத்திற்குப் பிறகு என்ன தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை தெளிவாக விளக்குகிறது. […]
ஆந்திராவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. ஒரு பெண் ஒரு ஆணிடம் தெலுங்கி ஆபாச வார்த்தைகளால் திட்டி, பின்னர் அவரை தனது செருப்பால் பலமுறை அடித்துள்ளார்.. அந்த பெண் ஆந்திர அரசுப் பேருந்தின் ஒரு சீட்டில் தனது துப்பாட்டாவை போட்டுள்ளார்.. ஆனால் அந்த சீட்டில் ஒரு ஆண் உட்கார்ந்துவிட்டதார்.. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த நபரை கடுமையாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. தேதி குறிப்பிடப்படாத சம்பவத்தின் வீடியோ […]
200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற டெல்லி-ஸ்ரீநகர் ஸ்பைஸ்ஜெட் விமானம், இன்று ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. பயணிகள் அல்லது பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். SG 385 விமானம், நான்கு குழந்தைகள் மற்றும் ஏழு பணியாளர்கள் உட்பட 205 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரேன காற்று அழுத்தத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவசரநிலை […]
2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2025) இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பாராத விதமாக கணிசமாக உயர்ந்துள்ளது. உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% அதிகரித்துள்ளது.. இது முந்தைய மூன்று மாதங்களில் 7.4% ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் 6.5% ஆக இருந்தது. வளர்ச்சி 6.6% என்ற மதிப்பீட்டை விட அதிகமாக இருந்தது. இதன் மூலம், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகத் தொடர்கிறது. ஏனெனில் […]
தற்போதைய காலகட்டத்தில், கல்விச் செலவு வேகமாக அதிகரித்துள்ளது. பள்ளிக் கட்டணம், உடை, புத்தகங்கள், பிரதிகள், போக்குவரத்து மற்றும் பள்ளித் திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு மாதமும் நிறைய செலவாகின்றன. குழந்தைகளின் கல்விக் கட்டணத்திற்காக மட்டுமே தனியாக சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. ஆனால் முன்கூட்டியே சில சேமிப்புத் திட்டங்களைச் செய்தால், இந்த செலவுகள் பின்னர் ஒரு சுமையாக மாறாது. தபால் நிலையத்தின் ஒரு சிறப்புத் திட்டம் இந்தப் பிரச்சினைக்கு […]
நம் உடல் ஆரோக்கியத்திற்கு சமச்சீர் உணவு அவசியம்.. காய்கறி, பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள், முட்டை என உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கும் உணவை சாப்பிட வேண்டும்.. குறிப்பாக இதில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. அவற்றில் காணப்படும் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. அவை குறிப்பாக சருமத்தை பளபளப்பாகவும், உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்கின்றன. பலர் எடையை குறைக்க அல்லது உடலில் […]
சமூக ஊடகங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றனர்.. ஏரோபிளேன் மோடில் சார்ஜ் போட்டால், போன் வேகமாக சார்ஜ் ஆகும் என்று பலர் நம்புகிறார்கள், அதே நேரத்தில் சிலர் போனின் பேட்டரியை ஃப்ரீசரில் வைத்திருப்பது அதை சரிசெய்யும் என்று நம்புகிறார்கள். நம்மில் பலரும் இது போன்ற வதந்திகளை கேட்டிருப்போம்.. சிலர் இந்த ட்ரிக்களை முயற்சி செய்து பார்த்திருப்போம்.. ஆனால் இந்த வதந்திகளின் பின்னணியில் உள்ள உண்மை […]
தூத்துக்குடி எட்டையபுரத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.. தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் இனாம் அருணாசலபுரம் – தோமாலைபட்டி அருகே உள்ள ஜாஸ்மின் என்ற பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 4 அறைகள் தரைமட்டமான நிலையில், ஒருவர் உடல் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து தகவல் கிடைத்த நிலையில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. உடல் கருகிய […]

