அதிமுக – பாஜக கூட்டணியின் போலி பக்தியையும் அரசியல் நாடகத்தையும் யாரும் இங்கு ஏற்க மாட்டார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது “ கடந்த கால ஆட்சியாளர்களால் சீரழிந்த நாட்டை வரலாறு காணாத வளர்ச்சிக்கு கொண்டு சென்றுள்ளோம்.. ஓரவஞ்சனை செய்யும் மத்திய அரசால் கூட நமது வளர்ச்சியை தடுக்க முடியவில்லை.. பாஜகவும், அதிமுகவும் மக்களை பற்றி […]
போதை பொருள் வழக்கில் தமிழ் திரையுலகில் மேலும் பலர் சிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திரையுலக பிரபலங்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. குறிப்பாக கழுகு பட நடிகர் கிருஷ்ணாவுக்கு இதில் […]
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறுவதற்கான காப்பீட்டை மத்திய அரசு வழங்குகிறது. இந்தியாவில் மருத்துவ செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, குறிப்பாக தனியார் மருத்துவமனைகளைச் சார்ந்திருப்பவர்களுக்கு அல்லது நாள்பட்ட நோய்களை நிர்வகிப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் குறிப்பிடத்தக்க நிதிச் சுமையை ஏற்படுத்துகின்றன. இந்தச் சிரமத்தைக் குறைக்க, இந்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா […]
என் மூச்சிருக்கும் வரை நான் தான் பாமக தலைவர் என்று ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாமக தலைமை பொறுப்பு தொடர்பாக ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், அன்புமணியுடன் கருத்து வேறுபாடு விவகாரத்தில் இன்னும் முடிவு வரவில்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “ சமரசம் பேசுகிறோம்.. பேசிக்கொண்டே இருக்கிறோம்.. எல்லா பிரச்சனைக்கும் முடிவு […]
உத்தரகாண்டின் கோல்திர் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் மாயமாகி உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தின் கோல்திர் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து அல்கநந்தா ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், சுமார் 7 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். கர்வால் பிரிவு ஆணையர் வினய் சங்கர் பாண்டே […]
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.72,560க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் […]
பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். சீனாவின் கிங்டாவோவில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், SCO உறுப்பினர்கள் பயங்கரவாதத்தைக் […]
7 கோடி PF குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில், PF உறுப்பினர்களுக்கு EPFO விரைவில் ஒரு நல்ல செய்தியை அறிவிக்க உள்ளது. PF உறுப்பினர்கள் தற்போது PF பணத்தை எடுப்பது மிகவும் எளிதாக மாறும். உங்கள் PF கணக்கின் ஒரு பகுதியை நீங்கள் கோரிக்கை விடுக்காமலே பயன்படுத்த முடியும். தற்போதைய சூழ்நிலையில், PF தொகை கோரப்பட்ட 10 முதல் 15 நாட்களுக்குள் பெறப்படும், ஆனால் EPFO அமைப்பு இதில் விரைவில் புதிய […]
சென்னையைச் சேர்ந்த 30 வயது ரோபாட்டிக்ஸ் என்ஜினியர் ஒருவர், 11 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ரெனே ஜோஷ்லிடா என்ற பெண் பல போலி இமெயில் ஐடிகளை உருவாக்கி, பல மாதங்களாக ரகசியமாக இருக்க VPNகள் மற்றும் டார்க் வெப்களைப் பயன்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது முன்னாள் சக ஊழியர் ஒருவரை சிக்க வைப்பதற்காக அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.. ரெனே […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகளவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகும் […]

