கடந்த ஆண்டு ஜனவரியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். அவரின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கேப்டன் பதவியிலிருந்து விலகியது தொடர்பாக விராட் கோலிக்கும், அப்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையே பல்வேறு கருத்து மோதல்கள் இருந்துவந்தன. சொல்லாததை சொன்னதாக இருவரும் மாறி மாறி கூறிவந்தனர். விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதும் ரோகித் சர்மா இந்திய அணியின் முழு […]
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அறையின் கதவுகளை உட்புறமாக பூட்ட முயன்றுள்ளார். இந்நிலையில், கதவை சாத்திய மர்ம நபரை சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த விஜயன் என்பவர் பிடித்து வெளியேற்றினார். இதையடுத்து இதுபற்றி பந்தய சாலை காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர் […]
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தத்தங்குடியைச் சேர்ந்தவர் பழனி குருநாதன் (55). இவர் மங்கைநல்லூர் கடைவீதியில் தச்சுப் பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த புராசாமி (65) என்பவர் அவரது தச்சுப் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் நண்பர்கள்போல் பழகிவந்த நிலையில், இரவு நேரங்களில் மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரண்டு பேரும் வாந்தி மயக்கத்துடன் பட்டறையில் கிடந்துள்ளனர். இதை அறிந்த […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் நடிகை தமன்னா. தமிழில் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, அதன்பிறகு தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்னர் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், தமிழில் விஜய், அஜித், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். தெலுங்கில் பிரபாஸ், சிரஞ்சீவி உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் தமன்னா. தற்போது இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புனித ஜோசப் பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியை ஜேசுபிரபா. இவர் 2014-ல் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இவரது நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. இவரது நியமனத்தை 2017ல் அங்கீகரித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. தனது நியமனத்தை 2014 முதல் அங்கீகரித்து சம்பள பாக்கி மற்றும் பணப்பலன்களை வழங்கக்கோரி ஜேசுபிரபா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கப்பட்டு 2014 […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச எந்த தராதரமும் யோக்கிதையும் அண்ணாமலைக்கு இல்லை என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், ”ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது கவுன்சிலராகவோ இல்லாத அண்ணாமலை மீது அவரது சொந்த கட்சிக்காரர்களே ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சமுதாயத்தில் சாராயம் விற்பவர்கள், […]
சீனாவின் தலைநகரில் உள்ள ஒர்க்கர்ஸ் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதும் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட சனிக்கிழமை அன்று சீனா வந்தார் மெஸ்ஸி. பெய்ஜிங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை சோதனை பணியின் போது சீன காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மெஸ்ஸியிடம் சீன விசா இல்லாதநிலையில், அவர் அர்ஜென்டினா பாஸ்போர்ட்டை பயன்படுத்தாமல் ஸ்பெயின் பாஸ்போர்ட்டுடன் பயணித்ததால் குழப்பம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெஸ்ஸியின் விசா வருவதற்கு தாமதமாகியதால், […]
மலையாளம், தமிழ், கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த மூத்த மலையாள நடிகரான கசான் கான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் கந்தர்வம், சிஐடி மூசா, தி கிங், வர்ணபகிட்டு போன்ற படங்களிலும், தமிழில் செந்தமிழ்பாட்டு, கலைஞன், சேதுபதி ஐ.பி.எஸ், மேட்டுக்குடி, முறை மாமன், பிரியமானவளே உள்ளிட்ட 50 படங்கள் மூலம் எல்லோருடைய விருப்பமான நடிகராக வலம்வந்தார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகளான கதீஜா ரஹ்மான், இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கி வரும் புதியப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘பூவரசம் பீப்பீ’, ‘சில்லுக் கருப்பட்டி’, ‘ஏலே’ உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவர், அடுத்ததாக ‘மின்மினி’ என்றப் படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கடந்த வருடம் (2022) ஆரம்பித்ததாக இயக்குநர் ஹலிதா […]
எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான அகில இந்திய பொதுக் கலந்தாய்வு நடத்தும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினரகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் ஒட்டு மொத்தமாக தேசம் முழுவதற்கும் கலந்தாய்வு நடத்தும் பட்சத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவம் படிக்கவேண்டும் என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் நிராசையாகிவிடும் ஆபத்துகள் உள்ளன. மத்திய அரசே பொதுக் கலந்தாய்வு நடத்துவதால் தமிழ்நாட்டில் […]