அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தனது வாடிக்கையாளர்களுக்காக மூன்று புதிய OTT ப்ரீபெய்ட் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ப்ரீபெய்ட் பேக்குகளின் சிறப்பு என்னவென்றால், அவை OTTplay உடன் இணைக்கப்பட்டுள்ளன. புதிய பேக்குகள் இப்போது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன. இருப்பினும், அவற்றின் கிடைக்கும் தன்மை வட்டத்திற்கு வட்டம் மாறுபடலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், BSNL இலவச BiTV சேவையை அறிமுகப்படுத்தியது. சேவையை வெற்றிகரமாக சோதித்து அதன் பயனர்களுக்கு மேம்படுத்திய பிறகு, இந்த […]
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு நாளைக்கு பல மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களிலே செலவழிக்கின்றனர்… ஸ்மார்ட்போனை அதிகளவு பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பல ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளன. ஸ்மார்ட்போன் திரையில் இருந்து வெளிப்படும் நீல ஒளி ஒரு நபரை அவரது வயதிற்கு முன்பே முதுமையடையச் செய்யும் என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இது தோல் தொடர்பான பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். […]
மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாரான ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.. இதையடுத்து விமானம் ரன்வேயில் இருந்து மீண்டும் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.. இந்த விமானத்தில் சுமார் 130 பயணிகள் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.. தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய விமான குழுவினர் முயன்றனர்.. எனினும் நீண்ட நேரமாக இந்த […]
என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்து ஆவணங்களை வெளியிட்டு வந்தார்.. அந்த வகையில் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டார்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணாமலையில் ரூ.100 கோடி இழப்பு கேட்டு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் டி.ஆர் பாலு வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.. இன்று இந்த வழக்கு […]
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், மதுரவாடா பகுதியில் உள்ள ஸ்ரீ தனுஷ் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவனின் கையை உடைத்ததாக ஒரு ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆசிரியர் இரும்பு மேசையால் மாணவனை கொடூரமாக தாக்கியதில்.. அவரின் கை உடைந்துள்ளது.. மேலும் மாணவனின் கையில் பல எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறுவனின் கை மூன்று இடங்களில் உடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அவர் மெடிகவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவருக்கு அறுவை […]
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராகு ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகிறார். தற்போது, ராகு பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். டிசம்பர் 2 ஆம் தேதி, அது சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். தற்போது பூர்ட்டாதி நட்சத்திரத்தில் ராகு சஞ்சரிப்பது சில ராசிகளுக்கு நல்ல பலன்களை தருகிறது.. குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் அதிக நன்மைகளை பெறுவார்கள்.. மேஷம் மேஷ ராசிக்கு ராகு நட்சத்திர பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும். இந்த நேரத்தில், உங்கள் […]
ஆகஸ்ட் 30 ஆம் தேதி புதன் கிரகம் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் நுழையப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு ஒரு சிறப்பு நன்மை பயக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். உண்மையில், ஜோதிடத்தில் புதனுக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இந்த கிரகம் தொடர்பு மற்றும் புத்திசாலித்தனம், நட்பு மற்றும் செல்வத்தின் குறிகாட்டியாகக் கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கிரகம் நல்ல பலன்களை வழங்குவதால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முக்கியமான […]
திமுக மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான சின்னசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. தருமபுரி மாவட்ட திமுகவின் மூத்த தலைவர் ஆர். சின்னசாமி. இவர் 1971, 1984, 1989 ஆண்டு தேர்தல்களில் திமுக சார்பில் தருமபுரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக ஆர். சின்னசாமி இன்று காலமானார்.. அவரின் மறைவு தருமபுரி மாவட்ட திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி […]
ஜிஎஸ்டி கவுன்சில் பல பிரபலமான உணவுப் பொருட்களின் மீதான வரியைக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதால், சில பொருட்களின் விலை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனால் நுகர்வோர் விரைவில் தங்கள் வீட்டுச் செலவுகளை கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.. வெண்ணெய், கண்டென்ஸ்டுபால், ஜாம், காளான்கள், பேரீச்சம்பழங்கள், நட்ஸ் போன்ற பொருட்கள் தற்போதைய 12 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்திலிருந்து வெறும் 5 சதவீதமாக மாற வேண்டும் என்று ஃபிட்மென்ட் கமிட்டி முன்மொழிந்துள்ளது. […]
1990களின் நடுப்பகுதியில் இருந்து 20 முதல் 39 வயதுடைய இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 சதவீதம் அதிகரித்து வருகின்றன என்று புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.. உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வது ஆகியவை இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த வகை புற்றுநோய் இளைஞர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது, […]

