8-வது ஊதியக்குழு எப்போது அமைக்கப்படும் என்பது தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.. மத்திய அரசு ஊழியர்கள், 8-வது ஊதிய குழு எப்போது அமைக்கப்படும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் தற்போது அரசு ஊழியர்களுக்கு கவலையளிக்கும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.. ஆம்.. 8வது சம்பளக் குழுவின் கீழ் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) செயலாளர் நிலை பதவிகளை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. இதனால் 8வது […]

அஜித்குமார் நகைகளை எடுத்ததை நான் கண்களால் பார்க்கவில்லை என்று நிகிதா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணையும் நடந்து முடிந்துள்ளது.. […]

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண ஆவணப்படம், Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.. இந்த ஆவணப் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.. அதில் நானும் ரவுடி தான் படத்தின் 3 நிமிட படப்பிடிப்பு காட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் இது தொடர்பாக தனுஷின் வொண்டர்பார்ஸ் […]

அறிவித்தால் ஆணையாக வேண்டும்! அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 10 அரசு துறைகளின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நான்கு மணி நேரம் நீடித்த 10 அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன். ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் […]

பூமி இப்போது இயல்பை விட வேகமாகச் சுழன்று வருகிறது என்றும் இதனால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 3 நாட்களில் என்ன மாற்றம் ஏற்படும் என்பது குறித்தும் விஞ்ஞானிகள் பதிவிட்டுள்ளனர்.. பூமி என்ற கோள் தனித்துவமானது. பூமியின் தன்னை சுழன்று சூரியனை சுற்றி வருவதால், இரவு பகல் மாறி வருகிறது.. பூமி தன்னை தானே சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நேரம் 24 மணி நேரம்.. அதாவது ஒரு நாள்.. அதே […]

ஜூலை 15, 2025 முதல், SBI கிரெடிட் கார்டுகள் தொடர்பான சில முக்கியமான விதிகள் மாறப்போகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. உங்களிடம் SBI கிரெடிட் கார்டு இருந்தால், உங்களுக்கு முக்கியமான அப்டேட் வந்துள்ளது.. ஜூலை 15, 2025 முதல், SBI கிரெடிட் கார்டுகள் தொடர்பான சில முக்கியமான விதிகள் மாறப்போகிறது.. இந்த மாற்றங்கள் உங்கள் பில்களை நீங்கள் செலுத்தும் விதத்தையும் நீங்கள் பெறும் சலுகைகளையும் பாதிக்கும். குறைந்தபட்ச கட்டண விதிகள் […]

கோயில் ஊழியர் அஜித்குமார் கொலை சம்பவத்தை கண்டித்து மடப்புரத்தில் நாளை தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ திருப்புவனத்தில் போராட்டம் நடத்த முதலில் அனுமதி கேட்டோம்.. அனுமதி கொடுத்துவிட்டனர்.. நாளை ஆர்ப்பாட்டம் என்று உறுதி செய்த பின்னர், நள்ளிரவில் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதுவரை நடந்த எல்லா போராட்டத்திற்கும் நாங்கள் அனுமதி […]

ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு, காந்தாரா சேப்டர் 1 படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.. 2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான காந்தாரா படம் பான் இந்தியா வெற்றி படமாக அமைந்தது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படம் கன்னட திரையுலகின் மிகப்பெரிய வெற்றிப் படமாகும். இப்படத்தில் சப்தமி கவுடா, அச்யுத் குமார், கிஷோர் குமார் ஜி, பிரகாஷ் துமிநாட் மற்றும் மானசி சுதிர் ஆகியோர் முக்கிய […]

விரிவடையும் வணிகத் தேவைகள் மற்றும் மூலோபாய வளர்ச்சி நோக்கங்களுக்காக பொதுத்துறை வங்கிகள் நடப்பு நிதியாண்டில் கணிசமான எண்ணிக்கையிலான பணியாளர்களை நியமிக்க உள்ளன, இது மேம்பட்ட செயல்பாட்டு தேவைகள் மற்றும் சேவை விரிவாக்கத்தை ஆதரிக்க தங்கள் பணியாளர்களை வலுப்படுத்துகிறது. பொதுத்துறை வங்கிகள் நடப்பு நிதியாண்டில் தங்கள் வளர்ந்து வரும் வணிகத் தேவை மற்றும் விரிவாக்கத்தை பூர்த்தி செய்ய சுமார் 50,000 பேரை நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய […]

மகாராஷ்டிரா கடற்கரையில் பாகிஸ்தானிலிருந்து சந்தேகத்திற்கிடமான படகு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ரேவ்தண்டா கடற்கரைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான படகு, கண்டறியப்பட்டதை அடுத்து, இன்று காவல்துறை மற்றும் கடலோர் பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் தேடுதல் மற்றும் விசாரணையை தீவிரப்படுத்தியதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். கோர்லாய் கடற்கரையிலிருந்து 2 கடல் மைல் தொலைவில் படகு காணப்பட்டதுஞாயிற்றுக்கிழமை இரவு, ரெவ்தண்டாவில் உள்ள கோர்லாய் கடற்கரையிலிருந்து இரண்டு […]