திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆறுதல் கூறினார். திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த வழக்கில் 6 காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது.. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை […]

ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர் நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. Peak Hours எனப்படும் உச்ச நேரங்களில் ஓலா, உபர் உள்ளிட்ட நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான புதிய வழிகாட்டுதல்களை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஓலா, உபர் நிறுவனங்கள் பீக் ஹவர் நேரங்களில் அடிப்படை கட்டணத்தை விட 2 மடங்கு வரை வசூலிக்கலாம்.. […]

3 உணவுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று எய்ம்ஸ் மருத்துவர் எச்சரித்துள்ளார். நீங்கள் தினமும் சாப்பிடுவது உங்கள் நீண்டகால ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.. குறிப்பாக புற்றுநோய் என்று வரும் போது அதில் உணவு மிகவும் முக்கியம்.. எந்த ஒரு உணவும் தானாகவே புற்றுநோயை ஏற்படுத்தவோ அல்லது தடுக்கவோ முடியாது என்றாலும், நிலையான உணவு முறைகள் நோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்க முடியும.. பதப்படுத்தப்பட்ட மற்றும் சிவப்பு இறைச்சிகள், […]

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் அரசு திட்டங்களை கொண்டு செல்லும் பணியில் மக்கள் நல பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பணி நிரந்தரம், சிறப்பு காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நலப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்திருந்தனர். ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை.. ஊரக வளர்ச்சி துறையிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த […]

நேற்று முன் தினம் மாலை ​​ஜப்பான் ஏர்லைன்ஸ் போயிங் ட்ரீம்லைனர் 737 விமானம் திடீரென 26,000 அடி உயரத்தில் நடுவானில் கீழே விழப்போனதால், அதிலிருந்த பயணிகள் பீதியடைந்தனர். இதனால் பயந்துபோன பயணிகள் ஆக்ஸிஜன் முகமூடிகளை அணிந்துகொண்டனர்.. இதுவே தங்களின் இறுதி தருணங்களாக இருக்கலாம் என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர். சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்திலிருந்து டோக்கியோவின் நரிட்டா விமான நிலையத்திற்குப் பயணித்த JL8696 விமானம், புறப்பட்ட […]

கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் இறப்புகளின் அதிகரிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) ஆகியவை பெரியவர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்து நடத்திய விரிவான ஆய்வுகளை மேற்கோள் காட்டி அமைச்சகம் இந்தக் கூற்றை முன்வைத்தது. சுகாதார மற்றும் குடும்ப நல […]

என்னை பற்றிய அவதூறுகளை பற்றி நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் திருமணங்களை நடத்தி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ அறநிலையத்துறை நிகழ்ச்சிகளில் நான் அதிகமாக பங்கேற்கிறேன். 997 திருக்கோயில்களுக்கு சொந்தமான 7420 கோடி […]

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பைக் டாக்ஸி சேவை தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள் 2020 இல் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி இனி மாநில அரசுகள், வெள்ளை போர்டு பைக்களை Rapido, Ola மற்றும் Uber போன்ற பகிரப்பட்ட பயணத்திற்கான அனுமதிக்கும் கட்டமைப்பை வழங்குகிறது. புதிய வழிகாட்டுதல்களின் கீழ், போக்குவரத்து அல்லாத மோட்டார் சைக்கிள்களுக்கு அங்கீகாரம் அளிக்க மாநில அரசுகள் தினசரி, […]