மதுபான கொள்கையில் எந்த ஊழலும் நடக்க இல்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்… டெல்லியில் மதுபானங்கள் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு என குற்றம் சாட்டியும் டெல்லி அரசுக்கு புதிய கொள்கையினால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதில் அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கிய நிலையில், டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் […]
தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.. இன்றும் நாளையும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.. சென்னை மற்றும் புறநகர் […]
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது.. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 10,000-ஐ கடந்துள்ளது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது […]
விருதுநகர் மாவட்டம், விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.. இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.. இந்நிலையில் இன்று எதிர்பாராத விதமாக அந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.. […]
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற பொது நிகழ்ச்சியில் குண்டுவெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஃபுமியோ கிஷிடா வாகயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி துறைமுகத்திற்குச் சென்றார்.. அங்கு அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவரை நோக்கி மர்ம பொருள் ஒன்று விழுந்தது.. எனினும் அது சற்று முன்னரே விழுந்து பெரும் சத்தத்துடன் வெடித்தது.. இதில் பிரதமர் கிஷிடா நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.. […]
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான UPSC ஜூனியர் இன்ஜினியர், பப்ளிக் பிராசிகியூட்டர், ரிசர்ச் ஆபீசர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இந்த பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 27. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆயுஷ் அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மத்திய புலனாய்வுப் பணியகம், ஊழியர்களின் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று முன் தினம் 11,000-ஐ கடந்தது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இதனால் தங்கம் விலை […]
உலகளவில் அதிக பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் முன்னணி மெசேஜிங் ஆப்-ஆக உள்ளது.. இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.. வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு புதிய வசதிகளையும், அப்டேட்களையும் வழங்கி வருகிறது.. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம், தனது பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிவித்துள்ளது. சாதனத்தில் உள்ள தீம்பொருளிலிருந்து பயனர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சாதனச் சரிபார்ப்பு, முக்கிய வெளிப்படைத்தன்மையின் […]
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல மாநிலங்களில் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கபப்ட்டுள்ளது.. அனைத்து வயதினருக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் மாஸ்க் அணிவதால் நோய் பரவும் போது கணிசமாக குறைவாக உள்ளது. ஆனால் அதே நேரம், தவறான முறையில் மாஸ்க் அணிவது, நோய்த்தொற்று பரவும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆம்.. குழந்தைகள் தொடர்ந்து மாஸ்க்கை தொட்டால் நோய்வாய்ப்படுவார்கள் என்று பொது […]