கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல மாநிலங்களில் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கபப்ட்டுள்ளது.. அனைத்து வயதினருக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் மாஸ்க் அணிவதால் நோய் பரவும் போது கணிசமாக குறைவாக உள்ளது. ஆனால் அதே நேரம், தவறான முறையில் மாஸ்க் அணிவது, நோய்த்தொற்று பரவும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆம்.. குழந்தைகள் தொடர்ந்து மாஸ்க்கை தொட்டால் நோய்வாய்ப்படுவார்கள் என்று பொது […]
பல வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி என்பது தற்போது அவசியமாகிவிட்டது, குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில், கோடை மாதங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரும். எனவே ஏசி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற சூழல் உருவாகிவிட்டது.. ஏசியில் இருப்பதால், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றாலும், ஏசியில் அதிக நேரம் இருப்பதால் நம் ஆரோக்கியத்திற்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.. ஆம்.. ஏசி அறையில் நீண்ட நேரம் செலவிடுவது […]
எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ராகுல்காந்தி அரசு பங்களாவை காலி செய்து வெளியேறினார்.. மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.. இதனை தொடர்ந்து ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டு, அவர் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.. இதை தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற செயலகம் உத்தரவிட்டிருந்தது.. இந்நிலையில் ராகுல்காந்தி […]
இந்தோனேசியாவில் இன்று 7.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் ஜாவா தீவின் வடக்கே கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 4:55 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 594 கிலோமீட்டர் (370 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.. இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 160 […]
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 10,000-ஐ கடந்தது. இந்த நிலையில் தற்போது இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,000ஐ கடந்துள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.. கொரோனா காரணமாக 29 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை […]
ஏப்ரல் 17-ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5,000, 6000 என உயர்ந்து வந்த நிலையில் இன்று 11,000-ஐ கடந்துள்ளது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை […]
கழிவுநீரை சேகரிக்கும் வாகனங்களுக்கென, விதித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தமிழக நகராட்சி நிர்வாக துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.. விருதுநகரை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அதில் “ விருதுநகர் மாவட்டத்தில், மனித கழிவுகளை அகற்றக்கூடிய செப்டிக் டேங்க் லாரிகளுடன் அகற்றக்கூடிய கழிவுகள், விருதுநகரில் உள்ள நீர்நிலை, ஆற்றுப்படுகை பகுதிகளில் வெளியேற்றப்படுகின்றன.. […]
டைம் பத்திரிகையின் 2023 ஆம் ஆண்டின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் பிரபல இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி மட்டுமே இடம்பிடித்துள்ளனர். எஸ்எஸ் ராஜமௌலிக்கு ஆலியா பட் சுயவிவரத்தை எழுதிய நிலையில், நடிகை தீபிகா படுகோன் ஷாருக்கானின் சுயவிவரத்தை எழுதினார். ஆலியாவின் பதிவில் “ராஜமௌலி தனது பார்வையாளர்களைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டுள்ளார்.. தனது கதைகளில் சரியான துடிப்பு மற்றும் திருப்பங்களை எவ்வாறு […]
தமிழக பாஜக தலைவர் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. ரஃபேல் வாட்சின் பில்லை தர வேண்டும் என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த அண்ணாமலை ரஃபேல் கடிகாரத்தின் ரசீது தன்னிடம் உள்ளதாக கூறிவந்தார்.. இதை தொடர்ந்து ரசீது எங்கே என்று சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.. பின்னர் ஏப்ரல் 14-ம் […]
தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.. இன்றும் நாளையும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.. வரும் 18-ம் […]