தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரையின் தொடக்க நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.. இது சித்திரை பிறப்பு, வருடப்பிறப்பு, தமிழ்ப் புத்தாண்டு, சித்திரை விஷு என பல பெயர்களால் கொண்டாடப்படுகிறது.. அதன்படி இன்று ஏப்ரல் 14-ம் தேதி சுபகிருது வருடம் முடிந்து சோபகிருது ஆண்டு பிறக்கிறது.. சித்திரை 1, (2023 ஏப்.14) வெள்ளிக்கிழமை, தேய்பிறை நவமி, திருவோண நட்சத்திரம், கடக லக்னம், மீன நவாம்சம் கூடிய சுப நாளில் மதியம் […]
அடுத்த 3 நாட்களுக்கு மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட 4 மாநிலங்களில் வெப்ப அலை ஏற்படும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.. நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படக்குழு சென்னை திரும்பி உள்ளது.. மே மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.. மேலும் இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றதால், இப்படத்தின் […]
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில் கேரளாவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.. கண்ணூரில் அதிகபட்சமாக 41.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது மற்றும் பாலக்காடு உட்பட வடக்கு கேரளாவின் பல பகுதிகளில் நேற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மாநிலத்தில் பதிவான சராசரி வெப்பநிலை அன்று 36.2 டிகிரி செல்சியஸ் ஆகும். புதன். வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் அதிக வெப்பநிலை தொடரும் என […]
ஆதார் எண் என்பது இந்திய மக்களுக்கு, பயோமெட்ரிக் மற்றும் மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனித்துவமான அடையாள எண் ஆகும். வங்கிக் கணக்கு தொடங்குதல், பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்தல், மொபைல் இணைப்பு பெறுதல் மற்றும் அரசின் மானியங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெறுதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக ஆதார் அட்டை செயல்படுகிறது. ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற […]
11 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப் புத்தகங்களிலிருந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் 370 வது பிரிவு தொடர்பான தகவல்கள் நீக்கப்பட்டுள்ளது.. 11-ம் வகுப்பின் வரலாற்று புத்தகத்தில் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் 370 வது பிரிவு தொடர்பான தகவல்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) நீக்கி உள்ளது. மேலும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய குறிப்புகளும் நீக்கப்பட்டுள்ளது.. 10வது அத்தியாயத்தில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான […]
பழம்பெரும் நடிகையும், நாடகக் கலைஞருமான உத்தாரா பாக்கர் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 79.. தேசிய நடிப்பு பள்ளியில் நடிப்பை பயின்ற உத்தாரா பாக்கர், முகிஹாமந்திரி, மேனா குர்ஜாரி, துக்ளக் உள்ளிட்ட பல்வேறு நாடகங்களில் பல்வேறு வேடங்களில் நடித்தார். மேலும், தோகி (1995) சதாசிவ் அம்ராபுர்கர் மற்றும் ரேணுகா தஃப்தார்தார், உத்தராயன் (2005), ஷெவ்ரி (2006) ரெஸ்டாரன்ட் போன்ற மராத்தி படங்களில் அவர் நடித்துள்ளார்.. உத்தரா பாக்கர் தனது நாடக […]
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை நேற்று சந்தித்தனர். மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றது.. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார். இந்நிலையில் நிதீஷ் குமாரின் […]
கடும் வெப்பம் காரணமாக மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் முன் கூட்டியே கோடை விடுமுறை அளிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.. நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.. கடும் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.. இந்நிலையில் கடும் வெப்பம் காரணமாக, மேற்குவங்கத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி […]
தமிழகத்தில் இன்றும் நாளையும், இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.. இன்றும் நாளையும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.. வரும் 17-ம் தேதி […]