முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை, புலி வாலை பிடித்த மதுரைக்காரர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டலாக பேசியதை முதல்வர் ஸ்டாலின் ரசித்து சிரித்தார். தமிழக சட்டபேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.. அந்த வகையில் இன்று, உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரத்தில், […]
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது.. இந்நிலையில் […]
கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், இதுகுறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.. இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தனர்.. இதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து விளக்கம் அளித்தார்.. […]
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.. இதனிடையே கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் […]
வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.. அங்கு சிறிய தவறுகளுக்கு கூட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.. மேலும் அங்கு பல விசித்திரமான சட்டங்களும், விதிகளும் நடைமுறை உள்ளன.. இந்நிலையில் வடகொரியாவில் வழங்கப்படும் கொடூர தண்டனைகள் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மரணதண்டனை, ஆபத்தான மனித பரிசோதனைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்தல் உள்ளிட்ட கொடூரமான […]
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் உட்பட அனைவரும் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.. கொரோனா இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. கடந்த ஓராண்டாக இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.. நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,720க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம கடந்த மாதம் 1-ம் தேதி 2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. அப்போது அவர், பெண்களுக்காக, மத்திய அரசின் மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்தத் திட்டத்தில் பெண்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம், கூடுதல் வரி விலக்கு பலனையும் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் வங்கிகள் மற்றும் தபால் […]
பொதுவாக, ஒரு கேள்வி நம் மனதில் எழும் போதோ அல்லது நமது சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்றாலோ உடனடியாக நாம் கூகுளில் தேடத் தொடங்குவோம். நம் கேள்விக்கான பதிலை, அது தொடர்பான தகவல்களுடன் கூகுள் வழங்குகிறது.. எனவே கூகுள் தற்போது நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது.. ஆனால், கஸ்டமர் கேர் நம்பரை கூகுளில் தேடினால் ஆன்லைன் மோசடிக்கு ஆளாகலாம் என்று உங்களுக்கு தெரியுமா..? ஆம்.. போலி கஸ்டமர் கேர் […]
கொரோனா இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. கடந்த ஓராண்டாக இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.. நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000,2000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 3000-ஐ கடந்துள்ளது.. எனவே உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உணவில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கோடை காலத்தில், மக்களின் நோய் […]