பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.. வழக்கமாக ஆளுநர் உரையை தொடங்கும் போது நேரலை அளிக்கப்படுவது வழக்கம்.. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக நேரலை அளிக்கப்படவில்லை.. சட்டப்பேரவையின் செய்தியாளர் அறையிலும் ஆடியோ கட் செய்யப்பட்டது.. இதனால் சற்று சலசலப்பு நிலவியது.. முன்னதாக சட்டபேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் கலைஞர் கருணாநிதி வரலாறு புத்தகத்தை பரிசாக வழங்கினார்.. இந்த […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோ வெளியானதை தொடர்ந்து, கர்நாடக டிஜிபி டாக்டர் ராமச்சந்திர ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.. அந்த வீடியோ வைரலான நிலையில், ராமச்சந்திர ராவ் ஒரு ரகசிய இடத்தில் சட்டப் போராட்டம் குறித்து விவாதித்து வருவதாகக் கூறப்படுகிறது. மறுபுறம், இந்தச் சம்பவத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட மாநில அரசு, அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. டிஜிபி ராமச்சந்திர ராவின் […]
கச்சா எண்ணெய் விலை அதிரடியாக சரிந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. இதனால், வரும் காலத்தில் எரிபொருள் விலைகள் குறையக்கூடும் என்ற பெரும் நம்பிக்கையில் வாகன ஓட்டிகள் உள்ளனர். இருப்பினும், அவர்களுக்கு இப்போது ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. ஒரு முன்னணி நிறுவனம், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கணிசமாக உயரக்கூடும் என்று கணித்துள்ளது. இது நடந்தால், இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் பிற வாகனங்களை ஓட்டுபவர்கள் விலை உயர்வைச் […]
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முதல் பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை கூடுகிறது.. இன்று காலை 9.25 மணிக்கு சட்டப்பேரவைக்கு வரும் ஆளுநருக்கு பேண்ட் வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.. தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்று சட்டசபை அரங்கத்திற்கு அழைத்து செல்வார்.. ஆளுநர் ரவி சபாநாயகர் இருக்கைக்கு செல்வார்.. அவருடைய வலதுபுறம் […]
பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அந்தப் பதவிக்கு வேறு எந்த வேட்பாளரும் முன்மொழியப்படவில்லை என்றும் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், நிதின் நபின் பாஜக-வின் உயர்மட்ட தலைமைப் பொறுப்பை ஏற்கிறார், இது கட்சி மட்டங்களில் அவருக்குள்ள பரந்த ஆதரவைப் பிரதிபலிக்கிறது. அவர் மோடி அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக இருக்கும் ஜே.பி. நட்டாவிற்குப் பதிலாக இந்த பொறுப்பை […]
சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை கணிசமாக உயர்த்தியுள்ளது. நடப்பு நிதியாண்டில் (2025-26) இந்தியா 7.3% வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று அது சமீபத்தில் மதிப்பிட்டுள்ளது. இது முந்தைய கணிப்பை விட 0.7 சதவீதப் புள்ளிகள் அதிகமாகும். மேம்பட்ட நிறுவனங்களின் வருவாய் மற்றும் வலுவான பொருளாதார உத்வேகமே இதற்குக் காரணம் என்று சர்வதேச நாணய நிதியம் பகுப்பாய்வு செய்துள்ளது. வரிகள் தொடர்பான உலகளாவிய குழப்பங்கள் இருந்தபோதிலும், உலகப் […]
உங்கள் வீட்டிற்கு ஒரு புதிய டிவியை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் பழைய டிவியை மாற்றி, உங்கள் வீட்டையே ஒரு திரையரங்காக மாற்ற விரும்புகிறீர்களா? அப்படியானால், இதுவே சரியான நேரம். குடியரசு தினத்தை முன்னிட்டு, ஃபிளிப்கார்ட் நிறுவனம் பிரம்மாண்டமான சலுகைகளுடன் ‘குடியரசு தின விற்பனை 2026’-ஐ தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில், பிரபலமான பிராண்டுகளான பிளாபங்க்ட் மற்றும் கோடாக் ஆகியவை தங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. விற்பனை எப்போது […]
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். இதை தொடர்ந்து விஜய் 2-வது முறையாக இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் […]
200 ஆண்டுகளுக்குப் பிறகு, மிகவும் தனித்துவமான ‘பஞ்சகிரக யோகம்’ உருவாகிறது. ஒரே ராசியில் ஐந்து முக்கிய கிரகங்கள் இணையும் இந்த அரிய சேர்க்கை, ஜோதிடத்தின்படி, உலக அளவிலும் தனிப்பட்ட வாழ்விலும் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரும். இந்த மகா யோகத்தின் தாக்கத்தால், மூன்று ராசிக்காரர்களின் வாழ்வில் எதிர்பாராத நிதி ஆதாயங்களும் அனைத்து விதமான மகிழ்ச்சியும் கிடைக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. மேஷம் பஞ்சகிரக யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவைத் […]

