சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை மாநகராட்சியின் 2023-34-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.. இந்த பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 83 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக பிரியா தெரிவித்தார்.. மேலும் “ சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 139 பள்ளீகளுக்கு ரூ.15 கோடியில் கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும்.. […]

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி கடந்த ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது.. இதைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரியத் தொடங்கின.. எனினும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்த அதானி குழுமம், இந்தியாவின் வளர்ச்சி மீதான தாக்குதல் என்றும், அந்நிறுவனம் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் கூறியிருந்தது.. ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கைக்குப் பிறகு பல பெரிய முதலீட்டாளர்கள் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,320க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]

ஆப்பிரிக்காவில் மார்பர்க் என்ற ஆபத்தான வைரஸ் பரவி வருகிறது.. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஈக்குவடோரியல் கினியா நாட்டில் 9 பேருக்கு மார்பர்க் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்த மார்பார்க் வைரஸுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது சிகிச்சை இல்லை.. தான்சானியாவின் வடமேற்கு ககேரா பகுதியிலும் வைரஸ் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தான்சானியாவில் கடந்த வாரத்தில் மட்டும் மார்பர்க் வைரஸ் காரணமாக, 8 பேர் பாதிக்கப்பட்டனர், 5 பேர் உயிரிழந்தனர்.. ஈக்குவடோரியல் […]

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது.. கொரோனா […]

தேசிய ஓய்வூதிய திட்டத்தின் அனைத்து சந்தாதாரர்களும் வரும் 31-ம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட சில சேவைகளைப் பெறுவதற்கு, பான் கார்டுடன் ஆதார் அட்டையை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 என்று அறிவிக்கப்பட்டது.. இருப்பினும், பான் கார்டு – ஆதார் அட்டை இணைப்புக்கான […]

2023-24 நிதியாண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கூலி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு அறிவித்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்‌ தேசிய அளவில்‌ சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி திறன்சாரா உடல்‌ உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுடைய வயது வந்தோரை கொண்ட குடும்பம்‌ ஒன்றிற்கு அதிகபட்சமாக ஆண்டு ஒன்றிற்கு 100 நாள்கள்‌ வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கு 1 மணி நேர உணவு […]

தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது, இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]

ஏப்ரல் முதல் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நடைபெறும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியிம் 99-வது பதிப்பில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “‘மன் கி பாத்’ உடனான நமது உறவு அதன் 99வது படியை எட்டியுள்ளது. பொதுவாக, 99 கடினமான கட்டமாக கருதப்படுகிறது. குறிப்பாக கிரிக்கெட்டில், பதட்டமான தொண்ணூறுகள் மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. […]

பாகிஸ்தானில் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் அவதூறான செய்தி பரப்பிய முஸ்லிம் நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தலகாங்கில் வசிக்கும் முஹம்மது சயீத் என்பவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு, சையத் முஹம்மது ஜீஷான் என்பவர் மீது புலனாய்வு அமைப்பில் புகாரளித்திருந்தார்.. அந்த புகாரில், சையத் முஹம்மது ஜீஷான் வாட்ஸ் அப் குரூப்பில், அல்லாவை பற்றி அவதூறான உள்ளடக்கத்தை இடுகையிட்டதாக தெரிவித்திருந்தார்.. இதையடுத்து சையது முகமது […]