தனியார் பள்ளியில் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தனியார் பள்ளி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009இன் படி 2023-24ஆம் கல்வி ஆண்டில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்கேஜி வகுப்பிலும், 1-ம் வகுப்பு முதல் நடைபெற்று […]
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் 25 ஆயிரத்திலிருந்து 30,000 ரூபாயாக அதிகரித்து வழங்கப்படும். சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மற்றும் கேள்வி பதில் விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மானிய கோரிக்கையின் பொழுது பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்; முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் 25 ஆயிரத்திலிருந்து 30,000 ரூபாயாக அதிகரித்து வழங்கப்படும். அதேபோல மருத்துவ படி 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக […]
5,5 பில்லியன் டாலர் வருடாந்திர செலவைக் குறைக்கும் ஒரு பகுதியாக, பணியாளர்களில் இருந்து 7,000 பேரை பணியில் இருந்து அகற்ற ஏற்கனவே டிஸ்னி திட்டமிட்டுள்ளது. உலக அளவில் கார்ட்டூன் திரைப்படங்கள், லைவ் ஆக்ஷன் திரைப்படங்கள், தொலைக்காட்சி கார்ட்டூன் தொடர்களை உருவாக்கி வரும் நிறுவனம் வால்ட் டிஸ்னி. டிஸ்னி கதாப்பாத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட் டடிஸ்னி லேண்ட் என்னும் பொழுதுபோக்கு பூங்காஉலகின் பல பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. ஆனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள […]
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக சம்பளப் பட்டியல் தரவுகளின்படி, 2023 பிப்ரவரியில் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் 16.03 லட்சம் புதிய தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 2023 பிப்ரவரி மாதத்தில் சுமார் 11,000 புதிய தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலான தொழிலாளர்கள் 25 வயது பிரிவினராக இருந்தனர். இம்மாதத்தில் […]
தமிழகத்தில் வரும் 21,22 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி குறிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன் காரணமாக, நாளை தென் தமிழகம் […]
வீடற்ற 1,500 பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ.45 கோடியில் இலவச வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்தும் அறிவிப்புகளை வெளியிட்டும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசினார். அப்போது வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் 4 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு ரூ.25 கோடியில் புதிய விடுதிக் கட்டிடங்கள் கட்டப்படும். […]
முத்திரைத்தாள் விலை உயர்வை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; மக்களின் வாழ்வாதாரம் முன்னேற வழிவகை செய்யாத திறனற்ற திமுக அரசு விலையேற்றம் ஒன்றை மட்டுமே பரிசாக வழங்கி வருகிறது.திறனற்ற திமுக, ஆட்சிக்கு வந்த நாள் முதல் தொடர்ச்சியாக விலையேற்றம் ஒன்றை மட்டும் மூன்று மாத இடைவெளியில் மக்களுக்கு பரிசாக வழங்கி வருகிறது. […]
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில் 180 பயணிகள் இருந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஏர் இந்தியா தனது விளக்க குறிப்பில், புனே-டெல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் AI858 விமானத்தின் கண்ணாடியில் சிறிய விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாக தரையிறங்கியதாக தெரிவித்துள்ளது. நேற்று மாலை 5.44 […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. கார்த்தி சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நடந்துள்ள முறைகேட்டை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யான கார்த்திக் சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கும் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தில் கார்த்திசிதம்பரத்திற்கு சொந்தமான […]
நீட் தேர்வை ஜுன் மாதம் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சருக்கு மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இளங்கலை நீட் 2023 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 15 அன்று முடிவடைந்த நிலையில், தேர்வுக்கு தயாராக குறைந்த நேரம் இருப்பதாகக் கூறி தேர்வை ஒத்திவைக்குமாறு மத்திய அரசுக்கு பலர் கோரிக்கை வைத்தனர். மேலும் சில மாணவர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு ஜூன் மாதத்தில் தேர்வை நடத்த வேண்டும் […]