ரூ.1.76 கோடி செலவில் மாற்று திறன் குழந்தைகளை பராமரிக்க மாதம் தோறும் ரூ.4,500 மதிப்பூதியம் வழங்கப்படும். சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன்; நவீன கருவி வாசிக்கும் திட்டம் ரூ.1.4 கோடி செலவில் உயர்கல்வி பயிலும் பார்வை குறைவான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூபாய் 14,000 உதவித்தொகை வழங்கப்படும். […]
பாரத ஸ்டேட் வங்கி மியூச்சுவல் ஃபண்ட் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Assistant Vice President பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படும் […]
உலக அளவில் சர்க்கரை நோய் ஆராய்ச்சியில் இந்தியா முன்னிலை வகிக்க தயாராக உள்ளதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நீரிழிவு இந்தியா என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற 3 நாள் உலக நீரிழிவு மாநாட்டில் பேசிய அவர், பல தலைமுறைகளாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் டைப் 2 நீரிழிவு நோயை பெற்றுள்ளது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சுகாதாரத்திற்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருவதாக […]
இன்று முதல் ஏப்ரல் 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு செய்தி குறிப்பில்,”தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஏப்ரல் 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் 20-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழ்நாடு மற்றும் புதுவையில் […]
சமூகம் தங்களுடன் இல்லை என்று மக்கள் உணரும் சூழ்நிலைகளை மிஷனரிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். கோவிந்தநாத் மகாராஜின் சமாதியை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து சில மிஷனரிகள் இங்கு வந்து வாழ்கிறார்கள். இங்குள்ள மக்கள் அவர்களின் உணவை சாப்பிட்டு, அவர்களின் மொழியில் பேசுகிறார்கள், பின்னர் அவர்களையே மதம் மாற்றுகிறார்கள். 100 ஆண்டுகளில், எல்லாவற்றையும் […]
பாஜக முக்கிய தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜக முக்கிய தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக மற்றும் மாநிலங்களவையில் இருந்து ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களின் தன்னை மோசமான நடத்தியதாகவும், அவமானத்தால் நான் மிகவும் வேதனைப்பட்டதாகக் கூறினார். மே 10 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் […]
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் யுவ நிதி’ என்னும் திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கர்நாடகாவுக்கு வந்த, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தனது கட்சி, ஆட்சிக்கு வந்தால், முதல் அமைச்சரவை கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றும் என்று கூறியுள்ளார். கோலாரில் நடைபெற்ற பேரணியில் பேசிய காங்கிரஸ் தலைவர் 4 தேர்தல் […]
மகாராஷ்டிராவில் கடுமையான வெப்பத்தால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் மகாராஷ்டிராவில் பூஷன் விருது வழங்கும் நிகழ்வு நேற்று திறந்த வெளியில் நடைபெற்றது. கடுமையான வெப்பத்தால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 24 பேர் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நவி மும்பையின் கார்கரில் மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கும் விழாவின் […]
ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கின்றனர் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் […]
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவிதொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாதம் ஒன்றுக்கு SSLC தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200/-ம், SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-ம்,மேல்நிலைக்கல்வி (12ம் வகுப்பு) படித்தவர்களுக்கு ரூ.400/-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600/-ம் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு SSLC மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600/-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750/-ம் பட்டதாரிகளுக்கு ரூ.1000/-ம் […]