மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9,212 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கான்ஸ்டபிள் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் crpf.gov.in/recruitment இல் இந்த பதவிகளுக்கு ஏப்ரல் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். CRPF கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2023 (தொழில்நுட்ப & டிரேட்ஸ்மேன்) மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை […]
2024 முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் தற்போது 18,053 மெகாவாட் அளவுக்கு மின் தேவை உயர்ந்திருக்கிறது. தொழிற்சாலைகளுக்கான தேவை 35 ஆயிரத்து 615 மில்லியன் யூனிட்டாக அதிகரித்திருக்கிறது. 18 மணி நேரம் விவசாயிகளுக்கு […]
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]
டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து மோடி சமூகத்தினரை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி அவர் மீது குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மார்ச் […]
நாடு முழுவதும் துவரம்பருப்பு கையிருப்பை கண்காணிக்க குழு அமைத்த மத்திய அரசு. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நாடு முழுவதும் துவரம்பருப்பு கையிருப்பை கண்காணிக்க ஏதுவாக மத்திய நுகர்வோர் நலத்துறை கூடுதல் செயலாளர் நிதி கரே தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு, அந்தந்த மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் துவரம்பருப்பு இறக்குமதியாளர்கள், ஆலை நிர்வாகிகள், வர்த்தகர்கள் ஆகியோரிடம் உள்ள கையிருப்பை குறிப்பிட்டக் கால இடைவெளியில் கண்காணிக்கும் பணியை […]
நாட்டுப்புறப்பாடல் கலைஞர்கள் உட்பட அனைத்து கலைஞர்களையும் பாதுகாக்க ‘கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான உதவித்தொகை மற்றும் கௌரவத்தொகை’ பெயரில் கலாச்சாரத் துறை அமைச்சகம் ஒரு திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான உதவித்தொகை மற்றும் கௌரவத்தொகை திட்டம் 3 பிரிவுகளைக் கொண்டுள்ளது. பல்வேறு கலாச்சார துறைகளிலும், இளைய கலைஞர்களுக்கு உதவித்தொகை விருது, பல்வேறு கலாச்சாரத் துறைகளில், சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மூத்த மற்றும் இளையோர் கௌரவத்தொகை விருது, […]
HDFC வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். வங்கியில் Associate Sales Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பு உடைய படிப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]
தமிழ், இந்தி, கன்னடா, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கும் மேல் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னொசன்ட் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கேரளாவின் சாலக்குடி தொகுதியின் முன்னாள் எம்.பி. பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இன்னொசென்ட்(75), மூன்று முறை கேரள மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டு அதற்காகச் […]
வரும் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் […]
தேசிய பயிர்க்காப்பீடு இணையதளம் மூலம் இழப்பீடு தொகையை பெறும் DigiClaim எனப்படும் மின்னணு பணப்பரிமாற்ற முறையை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகம் செய்தார். இதன் மூலம் பிரதமரின் பசல் பீமா யோஜனா என்னும் பயிர்க்காப்பீடுத் திட்டத்திற்கான இழப்பீடுத்தொகையை மின்னணு பரிமாற்றத்தின் மூலம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த முடியும். இந்தத்திட்டத்தின் மூலம் 6 மாநிலங்களைச்சேர்ந்த விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை மின்னணு முறையில் வழங்கப்படும். பயிர்க்காப்பீடு […]