ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசர சட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பியது. அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைக்கே ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான மசோதா, கடந்த அக்டோபர் மாதம் […]
தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவைமையம் இல்லாத பகுதிகளில் இ-சேவைமையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் வழங்கும் சங்கங்கள், தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனம்,மீன்வளத்துறை, மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின் […]
தொழுநோய் குறித்த தேசிய உத்தி திட்டம் மற்றும் செயல் திட்டத்தை மத்திய அரசு ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கியது. மூன்றாண்டுகளுக்குள் அதாவது 2027 ஆம் ஆண்டுக்குள் தொழுநோய் பரவுவதை அடியோடு ஒழிப்பதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. தேசிய அளவில் இந்த இலக்கை எட்டும் வகையில் பின்னர், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் ஏராளமான முன் முயற்சிகளை எடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரப்படி, இந்தியா தொழுநோய் […]
நாளை சென்னை தி.நகரில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சிவஞானம் சாலை, சென்னை 600 017 என்ற முகவரியில் நாளை மாலை 4 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது புகார்களை கையொப்பமிட்ட கடிதத்தில் விவரங்களோடு-பதிவு தபால் (பதிவு செய்யப்பட்ட தேதி), பார்சல், காப்பீடு, மணியார்டர், […]
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சவரப்பு ரூ. 2.5 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.. பொருளாதார ரீதியாக நலிவடைந்த மாணவர்கள் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற ஆண்டு மொத்த வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினராக அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் இந்த குடும்பங்களைச் […]
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டு தோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2023-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க தகுதிகளாக 01.01.2022 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் […]
தமிழகத்தில் 25-ம் தேதி வரை, ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு […]
டெல்லி போன்ற வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை ரிக்டர் 6.8 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் மலைத்தொடர் பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உணரப்பட்ட நிலநடுக்கத்தின் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. முக்கியமாக டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் போன்ற வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனையடுத்து பீதியில் வீடுகளை விட்டு வெளியே […]
10-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 27.03.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் நடைபெறவுள்ள ஏப்ரஸ் 2023-ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 27.03.2023 பிற்பகல் www.dge.tn.gov.in என்ற.இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயண்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில் […]
இன்று உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராம சபைகளின் எண்ணிக்கை இவ்வருடம் 4-லிருந்து 6ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதன்முறையாக, இன்று உலக தண்ணீர் தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்திற்கான இடம், நேரம் ஆகியன கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜல்சக்தி […]