கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக ரூ. 3,000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது. பாஜக, காங்கிரஸ் தீவிரமாக தேர்தல் வேலைகளை செய்து வருகிறது. இந்தநிலையில் ராகுல் […]
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள நாதஸ்வரம், தவில், உதவி அர்ச்சகர் ஆகிய காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஏழு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் நன்றாக பேசுவோம் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். […]
பூஞ்சைகளினால் உருவாக்கப்பட்ட லாக்கேஸ் என்ற நொதி, ஜவுளித்துறையில் ஆடைகளுக்கு சாயமேற்றிய பிறகு நீர் நிலைகளில் திறந்து விடப்படும் அபாயமான சாயக்கழிவுகளின் மூலக்கூறுகளை சிதைக்கும் திறன் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இது சாயக்கழிவுகளை இயற்கையான முறையில் சுத்திகரிக்க உதவுவதால், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த பேராசிரியர் ரஞ்சித் பிஸ்வாஸ் மற்றும் டாக்டர்.சுமன் சக்ரவர்த்தி ஆகியோர் இணைந்து இதற்கான சோதனையை மேற்கொண்டுள்ளனர். புற ஊதாக்கதிர் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மற்றும் கணினி […]
இந்து பெண்களை அவமதிப்பவர்களின் கைகளை வெட்டுவோம் என மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் பாய் வீரேந்திரா. இவர், இந்து-இஸ்லாமியர் பிரிவினையை பயன்படுத்தி பாஜக போலி அரசியல் செய்வதாகவும், ஆனால் பாஜக தலைவர்கள் சிலர் தங்கள் மகள்களை, இஸ்லாமிய சமூகத்தினருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் என்றும் கூறினார். பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி […]
பொருளாதாரத்தில் நலிவடைந்த பட்டியல் வகுப்பினர் தங்களது விருப்பப்படி எந்த பயிற்சி நிலையத்திலும் மாணவர்கள் கற்கலாம். நாடு முழுவதும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பட்டியல் வகுப்பினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசின் இலவசப் பயிற்சி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 8,761 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் 1,239 […]
ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 75-ஆவது சுதந்திர தின உரையில் மக்களிடையே காணப்படும் இரத்த சோகையை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் பொதுவிநியோக திட்டம், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்திற்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்தார். தருமபுரி மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் […]
2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். இதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பொது பட்ஜெட் மின்னணு வடிவில் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படவுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி […]
தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கையில் மாற்றங்களை சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சரால் 14.3.2023 அன்று தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023 வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில், இதற்கு முன்பாக அங்கக வேளாண்மைக்கு என்று எந்தவொரு கொள்கையும் இல்லாத நிலையில், அதன் தேவையை அறிந்து, மக்களின் உடல் நலத்தை பேணிக் காக்கவும், மண்வளம், இயற்கை […]
சிறுதானிய மனிதர் என்று அனைவராலும் அறியப்பட்ட பிவி சதீஷ் காலமானார். தெலுங்கானா மாநிலத்தின் ஜஹீராபாத்தை தளமாகக் கொண்ட டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டியின் நிறுவனர் பிவி சதீஷ். 77வது வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் தெலுங்கானாவின் சிறுதானிய மனிதர் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து […]