நாகாலாந்தின் 121 வயதான புபிரேய் புகா என்ற பெண்மணி கிக்வர்மா கிராமத்தில் காலமானார். மூதாட்டி தனது கொள்ளு பேத்தி அர்ஹெனோவுடன் வசித்து வந்தார். தகவல் படி, புகா எண்பதுகளின் காலக்கட்டத்தில் பார்வையற்றவராகிவிட்டார், மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது காது கேட்கும் திறனையும் இழந்தார், அவருக்கு நான்கு குழந்தைகள் – மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்களின் மூத்த மகன் மாநிலத்தில் முதல் மெட்ரிக், முதல் பட்டதாரி […]
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35% மானியத்துடன் வாகன கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில் தமிழ்நாடு அரசு ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் புதிதாக சுயதொழில் தொடங்க முதல் தலைமுறை தொழில் முனைவோரின் தொடக்க முன்னெடுப்புகளை ஆதரித்து, நெறிப்படுத்தி, ஊக்குவிக்கும் நோக்கத்துடன் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினை 2012-13 முதல் மாவட்டத் தொழில் மையம் அலுவலகம் மூலமாக […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் செந்தில் குமாருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மார்ச் 8, 2023 அன்று முடிவடைந்த வாரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170-ஆக இருந்த நிலையில், மார்ச் 15, 2023 அன்று முடிவடைந்த வாரத்தில் அதன் எண்ணிக்கை 258-ஆக […]
போக்குவரத்துத் துறையில் கார்பன் உமிழ்வைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் படி, Gasoline-னுடன் எத்தனாலை கலப்பது, டீசல் வாகனங்களுக்கான எத்தனால் கலப்பு, பயோ டீசல், பயோ-சிஎன்ஜி, திரவமயமாக்கப்பட்ட இயற்கை வாயு, மெத்தனால், இரட்டை எரிபொருள், டி-மித்தேல் ஈதர், ஹைட்ரஜன் பேட்டரி வாகனம், ஹைட்ரஜன் சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களை அறிமுகப்படுத்தி உமிழ்வை மட்டுப்படுத்த இந்த அறிவிக்கை வகைசெய்யும். […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டன இந்த நிலையில் வானிலை மையம் மழைக்கான எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. வரும் 20-ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு […]
மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மூத்த குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்காக 1999-ம் ஆண்டு மூத்த குடிமக்களுக்கான தேசியக் கொள்கை அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கான நிதி மற்றும் உணவுப் பாதுகாப்பு, உடல்நலன், இருப்பிடம், இதர தேவைகள், தாக்குதல் மற்றும் சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சேவைகள் ஆகியவை இக்கொள்கையில் இடம்பெற்றுள்ளன. மேற்கத்திய நாடுகளை ஒப்பிடுகையில் வயதானவர்களை பராமரிப்பதில் இந்தியாவில் உள்ள குடும்பங்கள் இன்றும் […]
அரியலூரில் இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாமிற்கு அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஐனா (DDU-GKY) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிராமம் மற்றும் நகர்புறத்தில் உள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை […]
நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அந்நாட்டு […]
தேசிய தேர்வு முகமையின் (NTA) பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு CUET (UG) -2023-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் வழங்கும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும். 2022-23 கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், https://cuet.samarth.ac.in/. என்ற இணையதளத்தில் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக இணையதள […]
அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆதார் அட்டை விவரங்களை இணையம் மூலம் இலவசமாக புதுப்பிக்கலாம். நாடு முழுவதும் மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை இந்த இலவசச் சேவை கிடைக்கும். இந்த சேவையை myAadhaar எனும் இணையத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும். ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுபித்தால் வழக்கம்போல் ரூ.50/- கட்டணமாக வசூலிக்கப்படும். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் இந்த […]