மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில்‌ உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும்‌, ஒரு நிதியாண்டில்‌ உத்தரவாதம்‌ அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில்‌ அதிகபட்சம்‌ 100 நாட்கள்‌ உடலுழைப்பை வழங்கும்‌ மிகப்பெரிய சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்டங்களில்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ஒன்றாகும்‌. இந்த திட்டத்திற்கு 2023-24ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு குறைவான நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2023-24ம் நிதியாண்டு […]

16 முதல் 18-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். 16 முதல் 18-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி […]

நீட் முதுகலை தேர்வு முடிவுகளை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேசிய தேர்வு வாரியம் நீட் முதுகலை 2023 தேர்வை கடந்த 5-ம் தேதி நடத்தி முடித்தது. இந்த ஆண்டு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து தேர்வை எழுதினர். தற்பொழுது தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ முடிவின்படி, டெல்லியில் உள்ள VMMC & SAFDARJUNG மருத்துவமனையைச் சேர்ந்த ஆருஷி நர்வானி என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்ததுள்ளார். […]

வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் நில உரிமையாளர்களின் சாகுபடி விவரம் மற்றும் குத்தகைதாரர்களின் விவரம் மற்றும் அவர்களின் ஆதார் எண்ணுடன் Agri stack amd Grains செயலி மூலம் உள்ளீடு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர்‌ மாவட்டம்‌, பொன்னேரி கோட்டத்திற்குட்பட்ட பொன்னேரி மற்றும்‌ கும்மிடிப்பூண்டி வட்டங்களில்‌ தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளபடி, வேளாண்‌ அடுக்கு மற்றும்‌ GRAINS என்ற திட்டத்தின்‌மூலம்‌, வேளாண்மை உழவர்களின்‌ நலத்திற்காக நில உரிமையாளர்களின்‌ விவரங்கள்‌, சாகுபடி […]

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேவைகளை நிறைவேற்ற முன்னாள் மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் அணுக வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தனது அறிவிப்பில்; தலைமையாசிரியராகிய உங்களாலும், பணிபுரியும் ஆசிரியர்களாலும் தான் உங்கள் பள்ளி இயங்குகிறது. நீங்களே உங்கள் பள்ளியின் தூணாக இருக்கிறீர்கள். உங்கள் பள்ளியில் நேற்றைய மாணவர்கள் இறுதியாண்டு முடித்துச் சென்றுவிட்டனர். இன்றிருக்கும் மாணவர்கள் நாளை சென்று விடுவர். ஆனால் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள். […]

TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், நந்தனத்தில் […]

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் போட்டித் திட்டத்திற்கு புதிய இணையதளம். இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத் தூணாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையை வலுப்படுத்துவதற்கான நமது முயற்சிகளின் ஒரு பகுதி இது என்று அவர் கூறியுள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை சாம்பியன் திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைப் போட்டித் திட்டம் (LEAN) தொடங்கப்பட்டது. இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத் […]

மக்களைவில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள மத்திய அமைச்சர் ரமேஷ்வர் தெலி , அமைப்பு சாரா தொழிலாளர்களின் விரிவான தரவை ஏற்படுத்த ஈ-ஷ்ரம் இணையதளத்தில் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது என்றும் இதன் மூலம் அவர்கள் குறித்த அனைத்து தரவுகளும் இந்த தளத்தில் இடம் பெறுகின்றன. தற்போது இந்த இணையதளத்தில் 28 கோடியே 62 லட்சத்து 55 ஆயிரத்து 105 தொழிலாளர்கள் […]

மத்திய அரசு பணியாளா் தேர்வு ஆணையம் நடத்தும் 2023-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை https://ssc.nic.in/ என்ற அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று முறைகளில் நடைபெற உள்ள இத்தேர்வில் வெற்றி பெற்றவா்களுக்கு தொடக்க கால மாத ஊதியம் ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வுக்கான பயிற்சியை தாட்கோ நிறுவனம், ‘வராண்டா ரேஸ்’ என்ற தனியாா் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவமாக வழங்குகிறது. 18 […]

அடினோ வைரஸ் பாதிப்பால் கொல்கத்தா மருத்துவமனையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் அடினோ வைரஸ் அச்சத்திற்கு மத்தியில், கொல்கத்தா மருத்துவமனையில் மேலும் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பி.சி. ராய் குழந்தைகள் மருத்துவமனையில், அடினோவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதில், நான்கு குழந்தைகளும் இருமல், சளி மற்றும் கடுமையான சுவாசப் பிரச்சனைகள் போன்ற வைரஸ் தொடர்பான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம், செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத்தின் முதலமைச்சர் முதல்வர் மம்தா […]