பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வீதம் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கவிருக்கிறார். இத்திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாக மொத்தம் ரூ. 16,800 கோடி டெபாசிட் செய்யப்படும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பிஎம் – கிசான் 13வது தவணை வெளியீட்டு நிகழ்வு, இந்திய ரயில்வே, ஜல் ஜீவன் இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து, கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெறும். இத்திட்டத்தின் கீழ் 11 […]
மதுபான கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் […]
10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10, 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தியை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 10, 20 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள், பேருந்துகள் போன்ற இடங்களில் வாங்க மறுப்பதாக புகார்கள் எழுந்தன. 10,20 […]
11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், நாளை முதல் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், நாளை முதல் dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள், தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து […]
டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் மார்ச் 1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மார்ச் 1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, […]
நோக்கம்’ என்ற செயலியின் மூலம் TNPSC,TNUSRB, SSC,IBPS, UPSC போன்ற அனைத்து நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப்பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவணங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும், தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் அது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் AIM TN என்றழைக்கப்படும் […]
பட்டியலின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை இணையவழி சாதி சான்று கேட்டு விண்ணப்பிக்கும் போது உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் மாணாக்கர் கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க ஆதார் எண், ‘இணையவழியில் பெறப்பட்ட வருமான சான்று, சாதி சான்று உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு இ-சேவை மையம் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணக்கருக்கான […]
இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று விடுமுறை தினமாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா சமிபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனுடன் ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட மற்ற மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் […]
பாரத ஸ்டேட் வங்கி மியூச்சுவல் ஃபண்ட் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் […]
நாட்டின் மிக நீளமான நதிக்கப்பலான எம்வி கங்கா விலாஸ் பிப்ரவரி 28ம் தேதி திப்ருகாரில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளது. பிரதமர் மோடியால் ஜனவரி 13ம் தேதி வாராணாசியில் இருந்து கொடியசைத்துத் துவைக்கிவைக்கப்பட்ட உலகின் மிக நீளமான நதிக்கப்பலான எம்பி கங்காவிலாஸின் பயணம் பிப்ரவரி 28ம் தேதி திப்ருகாரில் நிறைவடைகிறது. இதையொட்டி, கப்பலுக்கு வரவேற்பு நிழ்ச்சியை நடத்த மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிப்போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும், […]