ஜார்க்கண்டில் உள்ள அரசு கோழிப்பண்ணையில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை, மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள தேசிய கால்நடை நோய்த் தடுப்பு நிறுவனத்தின் ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில், H5N1 எனப்படும் பறவைக்காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2023 பிப்ரவரி 17-ம் தேதி எடுக்கப்பட்ட மாதிரி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதையடுத்து ஜார்க்கண்ட் முழுவதும் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு 2023 பிப்ரவரி 20-ம் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. […]
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Faculty, In charge பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 2 ஆண்டு முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். […]
உலக வங்கியின் அடுத்த தலைவராக மாஸ்டர்கார்டின் முன்னாள் தலைமை நிர்வாகி அஜய் பங்காவைபிடன் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. உலக வங்கியின் அடுத்த தலைவராக மாஸ்டர்கார்டின் முன்னாள் தலைமை நிர்வாகி அஜய் பங்காவை பிடன் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. “வரலாற்றின் இந்த இக்கட்டான தருணத்தில் உலக வங்கியை வழிநடத்த அஜய் பங்கா தனித்துவமாகத் தயாராக இருக்கிறார்” என்று தலைவர் பிடன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த அவர் மூன்று தசாப்தங்களுக்கும் […]
டிஜிட்டல் எழுத்தறிவு, திறன் வளர்ச்சியை மேம்படுத்த சிஎஸ்சி அகாடமி-தேசிய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். இந்தியாவில் டிஜிட்டல் எழுத்தறிவு, திறன் வளர்ச்சியை மேம்படுத்த மின்னணு நிர்வாகச் சேவை இந்தியா நிறுவன பொதுச்சேவை மையத்தின் துணை நிறுவனமான சிஎஸ்சி அகாடமி-தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் திறன்மேம்பாடு, அங்கிகாரமையம், மெய்நிகர் அகாடமி, பயிற்சியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம், […]
இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை முன்னிட்டு 90 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காகவும், மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் ஹோலியின் போது பயண நெரிசலைத் தவிர்க்கவும், தேசிய போக்குவரத்து நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு ரயில் சேவைகளை இயக்க முடிவு செய்துள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் பயணிகளின் கூடுதல் நெரிசலைக் குறைக்கும் விதமாக மத்திய ரயில்வே லோக்மான்ய திலக் […]
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி அதிகமாக இருக்க கூடும். நாளை முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை […]
இந்தியாவில் நீருக்கு அடியிலான கேபிள், தரை இணைப்புகளுடன் இணையும் பகுதியின் உரிமக் கட்டமைப்பு முத்து பங்குதாரர்கள் இன்று மாலைக்குள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் நீருக்கு அடியிலான கேபிள், தரை இணைப்புகளுடன் இணையும் பகுதியின் உரிமக் கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை செயல்முறை குறித்த ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிசம்பர் 23, 2022 அன்று வெளியிட்டிருந்தது. அதில் வெளியிடப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து பங்குதாரர்கள் தங்களது கருத்துக்களை ஜனவரி […]
சென்னையில் நாளை எந்த பகுதிகளில் மின் நிறுத்தம் என்பதை பார்க்கலாம். சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பூந்தமல்லி, அம்பத்தூர் பகுதிகளில் மின் விநியோகம்நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும், மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழக்கம்போல வழங்கப்படும். அதன் படி, பூந்தமல்லி பகுதியில் உள்ள மணலி சரவணா நகர், […]
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 21-ம் தேதி தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இலங்கைக் கடற்படையினர் […]
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இன்று காலை 10 மணி முதல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம், மூன்றாம், நான்காம் வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன் படி, இன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறவுள்ள தனியார் […]