இறக்குமதி சுமையை குறைப்பதற்காக முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீது கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் தற்சார்பு இந்தியா கொள்கையின் கீழ் மருந்துகள் துறை உற்பத்தித் தொடர்பான ஊக்கத்தொகை திட்டத்தை கடந்த 2021ம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்திற்கு 6 ஆண்டு காலத்திற்கு ரூ.15,000 கோடிகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பங்கேற்க வந்துள்ள 55 விண்ணப்பங்களில் 20 குறு, சிறு, நடுத்தரத் […]
பேங்க் ஆஃப் இந்தியா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Credit Officers, IT Officer பணிகளுக்கு என மொத்தம் 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 29 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.. மேலும் […]
அக்னி வீரர் நியமனத்துக்கான பதிவு மார்ச் 15 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களுக்கான (ஆண்கள்) அறிவிக்கை கடந்த 15-ம் தேதி www.joinindianarmy.nic.in வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்த, திருமணம் ஆகாத ஆடவர்களிடமிருந்து அக்னி […]
பல்வேறு நிலைகளில் உள்ள ‘விவிஐபி கலாச்சாரத்தை’ ஒழிப்பதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அலுவலகங்களில் உதவியாளர்களை அழைக்கப் பயன்படுத்தப்படும் மணியை அகற்றுமாறு தனது ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அலுவலக உதவியாளர்களை அழைக்க மணியைப் பயன்படுத்தக்கூடாது, மாறாக அவர்களை தனிப்பட்ட முறையில் அழைக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அறிவுறுத்தல் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, வைஷ்னா தனது அலுவலகத்தில் இருந்த […]
மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுவதாக பரவி வரும் செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிரதான் மந்திரி பெரோஜ்காரி பட்டா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுவதாக செய்தி ஒன்று வாட்ஸ் ஆப் போன்ற பிற சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. மத்திய அரசு சார்பில் […]
தமிழகத்தில் 25-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று முதல் 25-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக் கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் […]
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வரும் 24-ம் தேதி நடைபெறும் முகாம் நடைபெறும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம், மூன்றாம், நான்காம் வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. தற்போது 24 அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி […]
நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டு யூரித்ரோஸ் கோபி லேசர் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு பின் நடிகர் பிரபு நலமாக உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளனர். […]
ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட சம்பத்தில் மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் ஆளுநர் ரவியை சந்தித்து வேதனையை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் பிரபு என்பர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்ததோடு, போராட்டத்தையும் நடத்தியது. அதன்படி நேற்று சென்னையில் ஓமந்தூரார் மருத்துவமனை முதல் போர் நினைவுச் சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி […]
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் மார்ச் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் மார்ச் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் […]