தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Electrican பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.9,500 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பத்தாரர்கள் வயது இருக்க […]

பயங்கரவாதத்திற்கு தொடர்புடையதாக கூறி இரண்டு அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. பஞ்சாபில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் நோக்கம் கொண்ட பயங்கரவாத அமைப்பான காலிஸ்தான் புலிப்படை பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ், பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு இன்று அறிவித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதல்படி, உள்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. பிராந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை, தேசப்பாதுகாப்பு, இந்திய இறையாண்மை ஆகியவற்றுக்கு சவால் விடுப்பதாகவும், பஞ்சாபில் […]

அருணாச்சலப் பிரதேசத்தில் இரண்டாவது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகரில், அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வின் வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து, இரண்டாவது நாளாக வன்முறைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது, போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலையை மறித்து, பான் அருணாச்சல கூட்டு வழிநடத்தல் குழு-ஏபிபிஎஸ்சியின் 13 அம்ச கோரிக்கை சாசனங்களை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தினர். இதற்கிடையில், இட்டாநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததால், நீதிமன்றம், ராஜ் பவன் […]

எச்டிஎஃப்சி வங்கி‌ நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாக அறியப்படும் எச்டிஎஃப்சி வங்கி‌, ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மொத்த நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித உயர்வுக்கு ஏற்ப வங்கி நிரந்தர வைப்புத்தொகை வட்டி விகிதத்தை பிப்ரவரி 8 அன்று 6.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படி, […]

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை […]

திரைப்படங்களி நடித்து பிரபலமான நடிகர் ஷாநவாஸ் பிரதான் வெள்ளிக்கிழமை காலமானார். தொலைக்காட்சி சீரியல், திரைப்படங்கள் மற்றும் OTT ஆகியவற்றில் பணியாற்றிய நடிகர் ஷாநவாஸ் பிரதான் காலமானார். அவருக்கு வயது 56. நடிகர் மிர்சாபூர், 24, பியோம்கேஷ் பக்ஷி, டோட்டா வெட்ஸ் மைனா போன்ற நிகழ்ச்சிகளிலும், ஷாருக்கானின் ரயீஸ் மற்றும் சைஃப் அலி கானின் பாண்டம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் யஷ்பால் ஷர்மா,. ஷாநவாஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஷாநவாஸ் […]

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களிடம் அலைவரிசையின் தரம் குறித்து டிராய் ஆய்வு கூட்டம் நடத்தி உள்ளது. நுகர்வோர் எதிர்கொள்ளும் தொலைத்தொடர்பு சேவைகளின் தரம் மற்றும் கோரப்படாத வணிகத் தகவல்தொடர்புகளின் அச்சுறுத்தல் தொடர்பான சிக்கல்களை ஆய்வு செய்வதற்காக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. சேவையின் தரம் மற்றும் நுகர்வோரின் அனுபவத்தின் தரம் ஆகியவற்றில் காணக்கூடிய முன்னேற்றத்தை நிரூபிக்க அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு தொலைத்தொடர்பு […]

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி விரைவில் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பெண்களின் புத்தாக்க முயற்சிகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு நிதி அளித்து, மகளிரை அதிகாரம் படைத்தவர்களாக மாற்ற ஏதுவாக, சுய உதவிக் குழுக்களுக்கான வங்கியை அமைப்பது குறித்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஆராய்ந்து வருதாகக் அத்துறைக்கான அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சார்பில் தயாரிக்கப்பட்டப் பொருட்களுக்கான கண்காட்சியான சாராஸ் அஜீவிகா மேளா […]

கர்நாடகாவில் உள்ள ஏல தளங்களில், பதிவு செய்யப்பட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான புகையிலையையும், பதிவு செய்யப்படாத விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அங்கீகரிக்கப்படாத புகையிலையையும் எந்த அபராதமும் இல்லாமல் விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. கர்நாடக பயிர்ப் பருவத்தில் உற்பத்தி குறைந்ததைக் கருத்தில் கொண்டு, பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான புகையிலை மற்றும் பதிவு செய்யப்படாத விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அங்கீகரிக்கப்படாத ஈரப்பதம் நீக்கி வெப்பமூட்டப்பட்ட வர்ஜீனியா […]

தேசிய தேர்வு முகமையின் (NTA) பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு CUET (UG) – 2023 அடிப்படையில் புதுவை பல்கலைக்கழகம் வழங்கும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பப் தளம் 09.02.2023 முதல் திறக்கப்பட்டது. 2022-23 கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த முதுநிலை திட்டங்களில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் CUET (UG) – 2023 க்கு https://cuet.samarth.ac.in என்ற இணையவழில் விண்ணப்பிக்கலாம். www.pondiuni.edu.in/admissions-2023-24/ என்ற முகவரியில் […]