இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 200 சதவீதம் அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க Rupay கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்பு Bhim UPI பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகைத் திட்டத்தை மத்திய அரசு இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2018-19 ஆம் நிதியாண்டிலிருந்து 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் 200 சதவீதம் உயர்ந்துள்ளது. 2018-19 ஆம் நிதியாண்டில் […]

பிரபல கலைஞர் லலிதா லஜ்மி, இந்திய எழுத்தாளர் மறைந்த குரு தத்தின் சகோதரி, 90 வயதில் காலமானார். 2007 ஆம் ஆண்டு அமீர் கான் நடித்த ‘தாரே ஜமீன் பர்’ திரைப்படத்தில் ஒரு சிறப்புக் கலைஞராக லலிதா நடித்துள்ளார், இதில் அமீர் கான் கலை ஆசிரியராக நடித்தார். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக தனது 90 வது வயதில் காலமானார். லலிதா லாஜ்மியின் மறைவுச் செய்தியை ஜஹாங்கிர் நிக்கல்சன் […]

தமிழகத்தில் வறண்ட வானிலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையாக இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் வரும் 17-ம் […]

ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்கலாமா என அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஹஜ்‌-2023-ல்‌ ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ தமிழ்‌ நாட்டைச்‌ சேர்ந்த முஸ்லிம்‌ பெருமக்களிடமிருந்து, மும்பையிலுள்ள இந்திய ஹஜ்‌ குழு சார்பாக தமிழ்‌ நாடு மாநில ஹஜ்‌ குழு, ஹஜ்‌ விண்ணப்பங்களை வரவேற்கிறது. மத்திய ஹஜ்‌ குழு மூலம்‌ ஹஜ்‌ 2023-ற்காக விண்ணப்பிக்கும்‌ முறை 10.02.2023 […]

விவசாயிகளுக்கு, தங்கள்‌ வேளாண்‌ பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க அதிக நேரமும்‌ அதிக அளவில்‌ வேலையாட்களும்‌ தேவைப்படுகிறது. காலவிரயத்தை தவிர்க்கவும்‌, வேலை ஆட்கள்‌ பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும்‌ வேளாண்மை இயந்திரமயமாக்குதல்‌ இன்றியமையாததாகிறது. அதிக விலையுள்ள வேளாண்‌ இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளுக்கு உதவும்‌ வகையில்‌ வேளாண்‌ இயந்திரங்கள்‌ மற்றும்‌ கருவிகளை தமிழக விவசாயிகளுக்கு வேளாண்மைப்‌ பொறியியல்‌ துறையின்‌ மூலம்‌ குறைந்த வாடகைக்கு வழங்கப்படுவதுடன்‌, அரசுத்திட்டங்கள்‌ மூலம்‌ மானிய விலையில்‌ […]

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த HMI development Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இன்ஜினியரிங் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். […]

அனைவருக்கும் நியாயமான விலையில், தரமான மருந்துகள் கிடைப்பதற்கு மருந்து உற்பத்தித் துறை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் மூலம் பிரதமரின் தேசிய மக்கள் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் ஏற்கெனவே 8,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. 2024-ம்ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000-மாக அதிகரிப்பதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மொத்தம் 1,759 மருந்துகளும், 280 அறுவைச் சிகிச்சை உபகரணங்களும் […]

ஆசியாவின் மிகப்பெரிய விமானக் காட்சி நிகழ்வான ஏரோ இந்தியா 2023-ஐ பெங்களூரில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். ஆசியாவின் மிகப்பெரிய விமானங்கள் மற்றும் விமான பாகங்கள் காட்சியின் 14வது பதிப்பான ஏரோ இந்தியா 2023-ஐ இன்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தொடங்கி வைக்கிறார். ‘100 கோடி வாய்ப்புகளுக்கான ஓடுபாதை’ என்ற கருப்பொருளில் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைத் திறன்களில் இந்தியாவின் […]

அரசு தேர்வில் ஆட்சேர்ப்பு மோசடி மற்றும் வினா தாள் கசிவு வழக்குகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். தேர்வில் ஏமாற்றுவோருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்தார். “இளைஞர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளுடன் அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது. தேர்வில் மோசடி செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் […]

குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை தடை செய்த நரேந்திர மோடி அரசின் மீது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கடுமையாக குற்றம் சாட்டினார், இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று கூறினார். கோதாரா கலவரம் குறித்த ஆவணப்படத்தை பிபிசி ஒளிபரப்பியபோது, அதற்கு தடை விதிக்கப்பட்டது. அஷ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர் இந்தியாவில் பிபிசியை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏன் இந்த திமிர்?… “இந்தப் பைத்தியக்காரத்தனம் […]