நீர்நிலை, புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்கள் தனியாருக்குப் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க, பத்திரப் பதிவுத்துறை புதிய வழிமுறையை அறிமுகம் செய்துள்ளது. ‘தமிழ் நிலம்’ தகவல் தொகுப்பில் சிறப்பு குறியீடு வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுக்காக சர்வே எண்ணை உள்ளிடும் போது, அது அரசு நிலமா என்பதை தானியங்கி முறையில் கண்டறிந்து, பதிவைத் தடுக்கும். இதனால், போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்கள் அபகரிப்பு செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு […]
ஆந்திரப் பிரதேச அரசு வியாழக்கிழமை ‘தாய்க்கு வந்தனம்’ என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளி செல்லும் குழந்தைக்கும் ஆண்டுதோறும் ரூ.15,000 வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக ரூ.8,745 கோடியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ‘சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் அறிவித்த வாக்குறுதி இன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசு […]
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் […]
பள்ளி மாணவர்கள் எழுதிய முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் 2023-ம் ஆண்டு முதல் முதல்வரின் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் வரை தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு […]
தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஐஜி மகேஷ்குமார், தமிழக கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாகவும், அங்கிருந்த ஜெயந்தி காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன முதன்மை விஜிலென்ஸ் […]
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. 2,299 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். புதிய வழிமுறைகள் கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வருவாய்த் துறை செயலரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள […]
சட்டப்பேரவை அறிவிப்பை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தி அடைந்த ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ள 2000 தம்பதியர்களுக்கு சிறப்பு செய்ய ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதிகளுக்கு சிறப்பு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.2,500 மதிப்பில் புடவை, வேட்டி சட்டை, மாலை, பூ, […]
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது 2 நாட்களாக மழை படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்த நிலையில், நேற்று அதைவிட கூடுதலான இடங்களில் மழை பெய்தது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையமும் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு கனமழை வெளுத்து வாங்கும் என்று கூறி உள்ளது. இந்த […]
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் 11.06.2025 மற்றும் 12.06.2025 ஆகிய நாள்களில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக இன்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 கி.மீ. ரோடு ஷோவில் பங்கேற்கிறார். 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து வைக்கிறார். முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக சேலத்துக்கு இன்று வருகிறார். காலை 10 […]
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2025-ஆம் ஆண்டில் சேலம், சேலம் (மகளிர்) மேட்டூர் அணை மற்றும் கருமந்துறை (பழங்குடியினர்) ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களான சேலம் பாலிடெக்னிக் ஐடிஐ, சேலம் மற்றும் வேல்ஸ் ஐடிஐ, மேட்டூர் ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு […]

