மத்திய அரசின் MTS பணிக்கு விண்ணப்பிக்க வரும் 17-ம் தேதி கடைசி நாள்‌ ஆகும். மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால் 12,523 MTS (Multi-Tasking Staff) காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்‌:17.02.2023 ஆகும்‌. இத்தேர்விற்கான கல்வித்தகுதி, பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி ஆகும்‌. மேலும்‌, 01.01.2023 அன்றைய நிலையில்‌ எஸ்‌.சி. எஸ்‌.டி பிரிவினர்‌ 30 வயதுக்குள்ளும்‌ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ […]

இசைமாமணி விருது பெற்ற லலிதா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ஐகிரி நந்தினி என்னும் பக்தி பாடல் இன்று வரை பலரது மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த பாடலை பாடியவர்கள் பம்பாய் சகோதரிகள் ஆவர். அவர்களில் இளையவரான லலிதா நேற்று உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். கேரளாவைச் சேர்ந்த இவர் மும்பையில் படித்து சென்னையில் வசித்து வந்தார். சகோதரி சரோஜாவும் இவரும் சேர்ந்து பல பக்தி பாமாலைகளை பாடல்களைப் […]

வாக்காளர் அட்டை விவரங்களில் மாற்றம் செய்பவர்களுக்கு க்யூஆர் கோடு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாக்காளர் அட்டை இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ ஆவுது தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டைகள், க்யூஆர் குறியீடு போன்ற மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள […]

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தின் லட்சத்தீவு (எஸ்டி) மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் 27.02.2023 அன்று நடைபெறும் என்றும் வாக்குகள் 02.03.2023 அன்று நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் 18.01.2023 அன்று அறிவித்தது. இந்த மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான முகமது ஃபைசலுக்கு எதிரான வழக்கில் லட்சத்தீவின் கவரட்டி அமர்வு நீதிமன்றம் தண்டனை விதித்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.இருப்பினும், முகமது ஃபைசல் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவரது […]

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த ரயில்வே வழக்கறிஞர் பணிக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு அவசியம் இல்லை. இந்த பணியில் சேருவதற்கு அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் […]

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 346 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 346 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. அறிவிப்பின்படி, இன்று புறப்பட வேண்டிய 60 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டு, பயனரின் கணக்குகளில் பணம் […]

தமிழகம் முழுவதிலும் போக்குவரத்து மேலாண்மை என்பது ஒரு தீவிரமான பிரச்சினையாக இருக்கிறது. சாலைகள் அதிக அளவில் நெரிசலை எதிர்கொள்கின்றன மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் அதிக உள்ளது. இதன் விளைவாக, அதிக எண்ணிக்கையிலான போக்குவரத்து விதிமீறல்களைக் கையாள்வதற்காக அரசாங்கம் அபராத தொகையை செலுத்த இ-சலான் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இ-சலானை ஆன்லைனில் செலுத்தலாம், ஆனால் அதை எப்படி மேற்கொள்வது என்ற முழுமையான செயல்முறை விவரம் பலருக்கு தெரிந்திருக்காது. உங்கள் இ-சலான் வைத்து ஆன்லைனிலும் […]

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை – திரிகோண மலையில் இருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 670 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு […]

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், பிப்ரவரி 1-ம் தேதி வரை தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேது ராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் 1-ம் தேதி வரை, மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள […]

தன்னைக் காட்டிக் கொள்ளும் கடவுள் ஆசாராம் பாபு பெண் சிஷ்யை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என குஜராத்தின் காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி டி.கே.சோனி, தண்டனையின் அளவை ஒத்திவைத்தார். ஆசாராம் மீது 2013ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் ஆசராமின் மனைவி உட்பட 6 பேரை நீதிமன்றம் விடுவித்தது. அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் படி, […]