ஜாதி மற்றும் பாகுபாட்டை நாம் ஒழித்தால், உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மும்பை ஜாம்னரில் நடந்த ‘பஞ்சாரா கும்ப் 2023’ நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்; நாம் சாதி மற்றும் பிராந்திய பாகுபாடுகளை அகற்ற வேண்டும், பிரித்தாளும் தந்திரத்தை பயன்படுத்தக்கூடாது, அப்போது உலகில் எந்த சக்தியாலும் நமது முன்னேற்றத்தை தடுக்க முடியாது. கட்டாய மதமாற்றம் […]
ஆள் கடத்தல் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்வதற்கு மாவட்ட எஸ்.பி.யினுடைய அனுமதி தேவையில்லை என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தென்காசியில் திருமணமான புது பெண்ணை கடத்தி, அவரது கணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையில் முறையான புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், இது தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்; தென்காசி கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி.யினுடைய அலட்சியமான மற்றும் இரக்கமற்ற மனநிலை […]
பாகிஸ்தானில் மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பெஷாவரில் மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 59 வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலியானவர்களில் பலர் தினசரி பிரார்த்தனைக்காக கூடியிருந்த போலீஸ் அதிகாரிகள் என்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் முகமது […]
கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவரை போலந் நாட்டு இளைஞர்கள் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த ஒருவர் போலந்தில் சடலமாக மீட்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, போலந்தில் பணிபுரிந்து வந்த தென் மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளன. கேரளா மாநிலம் ஒல்லூரில் வசிக்கும் சூரஜ் என்ற 23 வயது இளைஞரை ஜார்ஜியக் குழுவினரால் […]
கத்தோலிக்க வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.. மேலும் பணியில் முன் அனுபவம் 2 முதல் 8 ஆண்டு இருக்க […]
ஜி 20 கல்வி பணிக்குழு 2023-ன் முதல் கூட்டம் சென்னையில் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற கருப்பொருளில், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான, பொருத்தமான மற்றும் தரமான கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் அனைவரும் கற்றல் வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான இரண்டு நாள் விவாதங்களில் கல்வி பணிக்குழு கவனம் செலுத்தும். கடந்த தலைமைகளின் கீழ் நடைபெற்ற கலந்துரையாடல்களைக் கட்டமைக்கவும், […]
ஷார்ஜாவில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோளாறு காரணமாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. ஷார்ஜாவில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஹைட்ராலிக் செயலிழந்ததாக கூறியதை அடுத்து கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இரவு 8.04 மணிக்கு விமான நிலையத்தில் முழு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இரவு 8.26 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது […]
ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய கலால் வரிக் கொள்கை உத்தரப் பிரதேசத்தில் அமலுக்கு வர உள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய கலால் வரிக் கொள்கை அமலுக்கு வருவதால், உத்தரப் பிரதேசத்தில் வெளிநாட்டு மதுபானம் மற்றும் பீர் ஆகியவற்றின் விலை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. புதிய கலால் கொள்கை 2023-24க்கு உத்தரப் பிரதேச அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. அறிக்கையின்படி, வெளிநாட்டு மதுபானம், பீர், […]
காற்றழுத்த தாழ்வு காரணமாக 2-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று […]
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மேகலபாரா பகுதியில் வலையில் சிறுத்தை சிக்கி உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையின் உடலை மீட்டனர். சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளர் பிலிப் கூறுகையில், “இரவில் கோழிப்பண்ணையிலிருந்து சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்தபோது கோழிப்பண்ணையில் சிறுத்தை உயிரிழந்த நிலையில் தொங்குவதை பார்த்தேன். கோழி கூட்டில் கிட்டத்தட்ட 100 கோழிகள் இருந்தன, அதன் கால் சிக்கிக்கொண்டது. மேலும் சமீபகாலமாக […]