மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்படுத்தி வருகிறது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி இணைத்துக் […]

சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ் இறந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்., மாநிலத்தில் 31 ஆம் தேதி வரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில்ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 […]

டான்செட் தேர்வு மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக் கழக செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் டான்செட் (TANCET) மற்றும் சீட்டா (CEETA) நுழைவுத் தேர்வுகளுக்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டான்செட் தேர்வுக்கு […]

திருமணம் செய்துகொண்டு தாய்மையை தழுவ பெண்கள் அதிக வயது வரை காத்திருக்க வேண்டாம் என அஸ்ஸாம் முதல்வர் கூறியுள்ளார். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறுகையில், திருமணம் செய்துகொண்டு தாய்மையை தழுவ பெண்கள் அதிக வயது வரை காத்திருக்க வேண்டாம். தாய்மையை வரவேற்பதற்கான “பொருத்தமான வயது” 22 முதல் 30 வயது வரை இருக்கும் என்று கூறினார். பெண்கள் தாயாக மாறுவதற்கு அதிக […]

சேலம் மாவட்ட சுகாதார ஆரம்ப சுகாதார நிலையம்‌, நகர்புற நலவாழ்வு மையத்தில் செவிலியர்‌ பணிகளுக்கு என மொத்தம் 218 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். பணிக்கு கல்வி தகுதி B.Sc நர்சிங், ஆய்வக தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், அறிவியல் துறையில் டிப்ளமோ, பட்டப்படிப்பு எதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.15,000 வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியின்‌ அடிப்படையில்‌ […]

அண்மையில் திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021-ன் அடிப்படையில் மூன்று குறை தீர்வு மேல்முறையீட்டுக் குழுக்களை மத்திய அரசு இன்று அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி, தலா மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மூன்று மேல்முறையீட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2021 ஐடி விதிகள், நீதிமன்றங்களைத் தவிர, குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை உருவாக்குவதற்கும், புதிய பொறுப்புக்கூறல் தரங்களை உறுதி செய்வதன் மூலம் […]

40 யூனிட் வரை வீடுகளில் பயன்படுத்துபவர்களுக்கு கட்டண உயர்வு கிடையாது‌. கேரளா மாநிலத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ஒரு யூனிட்டுக்கு 9 காசுகள் மின் கட்டணம் உயர்த்தப்படும். ஒரு மாதத்திற்கு 40 யூனிட்கள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்கு மற்ற நுகர்வோரிடம் இருந்து யூனிட்டுக்கு 9 பைசா கூடுதல் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என மின்சார […]

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க நாளை சேலத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை கட்டாயம் அனைவரும் இனைக்க வேண்டும் என்கின்ற உத்தரவை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. நுகர்வோர் தங்கள் மின் மானியத்தைப் பெற விரும்பினால், ஆதார் அட்டையுன் மின் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான அரசாணையும் பிறப்பித்துள்ளது அரசு. ‌ இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கூடுதல் சிறப்பு முகாம் நாளை காலை 10 […]

இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த […]

14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்திருப்பது குற்றமாகும். வயதுக்கு மீறிய திருமணங்கள் மற்றும் தாய்மை அடைவதை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, வலியுறுத்தினார். 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்திருப்பது குற்றமாகும் என்பதால் அடுத்த 5 முதல் 6 மாதங்களில் ஆயிரக்கணக்கான கணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார். மாநிலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அஸ்ஸாம் முதலமைச்சர்; […]