கொரோனா மாறுபாடு ஒமிக்ரான் வழக்குகள் நாட்டில் கண்டறியப்பட்டதை அடுத்து, மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டார். மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், அரசாங்கம் அவ்வப்போது வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சர் எச்சரித்தார். கொரோனா மாறுபாடு தொடர்ந்து வரும், பொதுமக்கள் அனைவரும் அரசாங்கம் செல்லும் தகவல்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். என்ன பண்ற தகவல்களை நம்ப வேண்டாம் என அவர் கூறினார். […]
மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் (10ம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்) கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் பிரிமெட்ரிக் (9 மற்றும் 10ம் வகுப்புகள்) ஆகிய திட்டங்களுக்குரிய escholarship.tn.gov.in என்ற இணையதளம் விரைவில் திறக்கப்படவுள்ளது. மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த பழங்குடியினர் […]
நேற்று ஒரே நாளில் ஆப்கானிஸ்தான் மற்றும் டெல்லி தலைநகர் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தேசிய மையம் தனது ட்விட்டர் பக்கத்தில்; நேற்று ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் 5 முதல் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, தலைநகரில் உறைபனி வெப்பநிலைக்கு மத்தியில் டெல்லியில் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல தேசிய தலைநகர் நொய்டாவை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நேற்று இரவு 7.55 மணியளவில் ஆப்கானிஸ்தானின் […]
ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த […]
தெருநாய்களின் தொல்லைகள் குறித்து 1913 என்ற இலவச உதவி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவை பிடிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட பேசின் பாலம் நாய் இனக்கட்டுப்பாடு மையம் மற்றும் கண்ணாம்மாப்பேட்டை நாய் இனக்கட்டுப்பாடு மையம் ஆகிய இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. […]
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தெற்கு மத்திய இரயில்வே, தென் கிழக்கு ரயில்வே, மேற்கு ரயில்வேயில் Apprentices பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 7194 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்பித்து தேர்வு […]
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த இயக்கத்திற்கான ஆரம்ப ஒதுக்கீடு ரூ.19,744 கோடியாக இருக்கும். இதில் சைட் நிகழ்ச்சிக்கு ரூ.17,490 கோடியும், முன்னோடி திட்டங்களுக்கு ரூ.1,466 கோடியும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ரூ.400 கோடியும் இதர இயக்க அம்சங்களுக்கு ரூ.388 கோடியும் அடங்கும். மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், இத்திட்டத்திற்கான விதிமுறைகளை வகுப்பதுடன் […]
பொதுத்தேர்வுக்கு இன்று முதல் ஜனவரி 7-ம் தேதி வரை இ-சேவை மையங்களின் மூலம் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விடுமுறை நாட்கள் தவிர, பிற நாட்களில் அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 […]
2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க […]
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட […]