செய்முறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத 10-ம் வகுப்பு மாணவர்கள், நாளை மாலை வரையில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளலாம். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வினை எழுத விரும்பி, அறிவியல் செய்முறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், நாளை மாலை வரையில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிலும் […]
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதனால் இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான […]
தென்னை ஏறும் தொழிலாளர்கள் விபத்து காப்பீட்டை பெற எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வேளாண் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு அரசு கலைஞரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், வயதானோர்களுக்கான ஓய்வூதியம், கல்வி, மருத்துவச் செலவு, விபத்து உள்ளிட்ட பல்வேறு வகைகளில் உதவி வருகிறது. மேலும் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம், தென்னை விவசாயிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. […]
முன்னாள் முதல்வரின் சாலை பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடுவின் சாலை பேரணியில் ஏற்பட்ட நெரிசலில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாயுடுவின் கான்வாய் நடக்கும் அப்பகுதியை கடந்து சென்றபோது கூட்ட நெரிசல் தொடங்கியது. 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். “நெல்லூர் மாவட்டம் கண்டுகூரில் நேற்று தெலுங்கு தேசம் […]
TNPSC, RRB போன்ற அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது, 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, RRB, IBPS, TNUSRB, SSC, TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் […]
மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படலாம். ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ், மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். முதல் 100 யூனிட்டை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர் மற்றும் விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் […]
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Electrician பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.8,000 வரை […]
சீனாவில் இருந்து இலங்கை வழியாக தமிழகத்தின் மதுரைக்கு வந்த ஒரு பெண் மற்றும் அவரது 6 வயது மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விவரங்களை அளித்த மதுரை மாவட்ட ஆட்சியர், தாயும் குழந்தையும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், கூடுதல் பரிசோதனைக்காக மாதிரிகள் பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார். நேற்று வரை, தமிழகத்தில் 51 செயலில் உள்ள கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சுகாதார அமைச்சகத்தின் […]
2023 ஜனவரி முதல் தேதியில் இருந்து புதிய நிர்வாக அலகுகளை உருவாக்க முழு தடை விதிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் விடுத்துள்ள வேண்டுகோளை அடுத்து, 1950-ம் ஆண்டில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(A) பிரிவின்படி அசாம் மாநிலத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யும் முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, […]
வரும் 11ம் தேதி வரை செல்லாத மாணவர்களை கண்டறியும் பணியானது நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 18 வயதுடைய பள்ளிசெல்லா/ இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிய சிறப்புக் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் கண்டறியப்படும் சூழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் சிறப்புப் பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு தொடர் பணியாகும். கணக்கெடுப்பிற்கான தரவுகள் அனைத்தையும் உள்ளீடு […]