2025-ம் ஆண்டு வரை 100 விரைவு சக்தி சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும் விரைவு சக்தி சரக்கு முனைய கொள்கையின் கீழ் மூன்றாண்டுகளில், அதாவது 2024-25 வரை 100 விரைவு சக்தி சரக்கு முனையங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 22 முனையங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கொள்கையின் கீழ் சரக்கு முனையங்களை அமைக்க 125 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 79 விண்ணப்பங்களுக்கு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வேக்கு சொந்தம் இல்லாத […]
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்க உள்ளது. குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கும் நிலையில் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் போன்ற முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். பாஜக மீண்டும் குஜராத்தில் ஏழாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறது, மேலும் இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சிக்கு எதிரான போக்கைக் குறைக்கும் […]
2023 ஜனவரி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்படவுள்ளது. செறிவூட்டல் அரிசி, ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து மாநிலங்களின் உணவுத் துறை செயலாளர்களுடன் சமிபத்தில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் ஆலோசனை நடத்தினார். அதேபோல 2023-24 ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை முழுமையாக வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் செறிவூட்டப்பட்ட […]
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று மாலை புயலாக வலுப்பெற கூடும். இதன் காரணமாக 8, 9, 10 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். இன்று தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் […]
கனமழை எச்சரிக்கையின் காரணமாக இரண்டு மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று மாலை புயலாக வலுப்பெற கூடும். இதன் காரணமாக 8, 9, 10 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று […]
சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை மத்திய அரசு திடீரென ரத்து செய்துள்ளதை கைவிட்டு மீண்டும் வழங்கிட வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 29-11-2022 நாளிட்ட மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கடிதத்தில், கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயத் தொடக்கக் கல்வி (1 முதல் 8 -ம் வகுப்பு வரை) வழங்குவதை அரசாங்கம் […]
இடைநிலை ஆசிரியர் பணிக்குரிய தகுதிக்கான தாள் ஒன்று தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள் ஒன்றிற்கு கம்ப்யூட்டர் மூலம் அக்டோபர் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை காலை மற்றும் மாலை இருவேளைகளில் தேர்வினை நடத்தியது. இந்தத் தேர்வில் […]
நகைச்சுவை நடிகர் சிவநாராயண மூர்த்தி தனது 67வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவநாராயண மூர்த்தி தனது 67வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.சொந்த ஊரில் வசித்து வந்த நடிகர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு 8.30 மணியளவில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் 02.00 மணிக்கு அவரது சொந்த ஊரில் நடைபெறும். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை […]
பனிமூட்டக் காலங்களில் இந்திய ரயில்வே சேவையில் கால தாமதத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. நம்நாட்டின் வடக்குப் பகுதிகளில், ஏற்படும் பனிமூட்டங்களிலிருந்து ரயில் பயண சேவையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் ரயில் சேவையின் கால தாமதத்தைக் குறைப்பது போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்தப்படும். ரயில் இஞ்சின்களில் பனி மூட்டத்தை நீக்கும் கருவிகள் பொருத்தப்படுவது, அதிக […]
பொங்கலுக்கு, பரிசாக இலவச வேஷ்டி சேலையுடன் 1000 ரூபாய் கொடுப்பதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2020-ஆம் ஆண்டு 1,000 ரூபாய் ரொக்கம் உட்பட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2,500 ரூபாய் நிதி உதவி உட்பட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கம் இல்லாமல் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பினை மட்டுமே வழங்கியது […]